Articles tagged with: Music
அனுபவம், சினிமா இசை, செம்மொழி »
வலையில் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்களுக்கு பிடித்த பாடல்களை அதன் ரசம் கொஞ்சமும் குறையாமல் நம்முடன் பகிர்கிறார்கள். நானும் அதைத் தான் முயலப்போகிறேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக. பலர் அந்த பாடலை கேட்பதோடு நில்லாமல் பார்த்துவிட்டு அதை எடுக்கப்பட்ட விதத்தையும் மிக அழகாக கொடுக்கிறார்கள். என் கருத்து ஒரு பாடல் கேட்டவுடனேயே நம்மை ஆட்கொண்டுவிட்டால் அதற்கு பிறகு அதை எடுக்கப்பட்ட விதம் நமக்கு இரண்டாம் பட்சமாகிறது. அப்படிப்பட்ட பாடல்களே காலத்தை வென்று நிற்கிறது.
இதோ என் தொடக்கம்…..
முதன் முதலில் ஒரு குழந்தை அப்பா, அம்மா என்று தன் மழலைச் சொல்லில் கூப்பிடும் போது அந்த குழந்தையின் தந்தையும் தாயும் எந்த அளவிற்கு சந்தோஷம் அடைந்தார்கள் என்று கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கு சொல்ல தெரியாது.
அதே குழந்தை தனக்கே உரிய தெய்வ (மழலை) மொழியில் பல விஷயங்களை சொல்ல முற்படும். ஆனால் …
