Articles tagged with: Chennai Super Kings
ஐபிஎல்2, கிரிகெட் »
இந்த ஐபிஎல்லில் ஒன்று ஊர்ஜிதமாகிறது. முதலில் ஆடும் அணி குறைந்தபட்சம் 140க்கு மேல் ரன் சேர்த்தால் போதுமானதாக இருக்கிறது. ஒன்று மட்டும் புரியவில்லை. இரண்டாவதாக ஆடும் அணிகள் தன் நிலையறிந்து விக்கெட்டுகளை பறிகொடிக்காமல் ஆடினாலே இந்த 140லிருந்து 150 வரையான இலக்குகளை எட்டிவிடலாம்.
ஏனோ தெரியவில்லை மீண்டும் மீண்டும் எந்த அணி எப்போது ஆடினாலும் அந்த 10வது ஓவர் முடிந்து வரும் ப்ரேக்குக்கு பிறகு தானாகவே முன்வந்து விக்கெட்டை பறிகொடுக்கின்றன.
ஒருவேளை இது மோடியின் கட்டளையா என்று சந்தேகம் கூட வருகிறது. எல்லா இன்னிங்ஸிலும் இப்படி ஆகும் என்று தெரிந்தால் நிச்சயமாக நாம் யூகிப்பது நடக்குமா என்பதற்காகவாவது பார்வையாளர்கள் குறைந்தபட்சம் பத்து ஓவர் பார்ப்பது உறுதி.
அதற்கு பிறகு ஆட்டம் தன்னாலே விறுவிறுப்படைந்து விடுகிறது. இழுத்து கட்டிப்போட வேண்டிய அவசியம் இல்லை.
இன்னொரு சந்தேகம். நம்ம கம்ரான் கான் இந்தியர்தானா? …
