Home » Archive

Articles tagged with: கமல்

Featured, சிந்தனைகள் »

[2 Dec 2009 | 14 Comments | 511 views]

அரசியல் தலைவர்கள் தொன்றுதொட்டு மக்களிடையே செல்வாக்கை பெறவேண்டும் என்று உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அது இப்போது தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்துவிட்டிருக்கிறது. மூன்றாம் தரமான யுக்தியை கையாண்டு தமது கட்சி/ படங்களுக்கு வியாபாரத்தை கூட்டவும் தம்மை தாமே பிரபலபடுத்திக் கொள்ளவும் பல அறிக்கைகள் விடுவது என்பது நாளேடுகளிலும், வலைதளங்களிலும் கண்கூடு.
இதில் இவர்கள் பல வருஷங்களாக தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் ஆத்திக கண்டனம்.  ஆத்திகம் வலுப்பெற்றிருக்கும் இந்தியாவில் மட்டும்தான் இப்படியெல்லாம் நாத்திகம் பேசிக் கொண்டிருக்க முடியும்.
இப்படி இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருக்கும் இந்தியாவின் பெயர் ”ஹிந்துஸ்தான்” என்று இருந்ததை பேசியோ அல்லது எழுதியோ அழித்துவிட முடியாது. இருந்தாலும் திருடனை பிடிக்கிறேன் என்று கிளம்பி முட்டி கை கால் முதற்கொண்டு அனைத்திலும் பாண்டேஜ் போட்டு கொள்ளும் வடிவேலு காமெடி காட்சி போல …