காலை அலாரம் வைத்து கண்விழிப்பதிலிருந்து இரவு உறங்கிப் போவதுவரை நடப்பவை எல்லாம் ஒன்று நம்மாலோ அல்லது பிறராலோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதில் ஆத்திகருக்கும் நாத்திகருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆத்திகர்கள் நடப்பவை தமக்கு சாதகமாக இல்லையென்றால், வருத்தப்பட்டு கடவுளை வணங்குகிறார்கள்.
ரங்கராஜன் என்ற பெயருக்கும் எழுத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. எழுதும் கலைக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது. இவை இரண்டுமே நமக்கு இரண்டு நல்ல எழுத்தாளர்களை கொடுத்திருக்கிறது. 1931ஆம் ஆண்டு இரண்டு சிறப்புக்களை பெற்றது. அதுவும் இரண்டுமே தமிழ் சினிமா சம்பதப்பட்ட விஷயங்கள் என்பது இன்னும் விசேஷம். ஆம். அந்த ஆண்டில் தான் முதல் பேசும்படம் வந்தது