Home » Archive

Articles in the கவிதைத் தொகுப்பு Category

General, கவிதைத் தொகுப்பு, செம்மொழி »

[25 Jan 2009 | 5 Comments | 269 views]

”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” – கவியரசு.
நம் அன்றாட வாழ்க்கையில் வியப்புகளிலேயே மிக பெரியது ஒரு கவிஞனின் கற்பனை சக்தியாகத்தான் இருக்கும்.
பல விஞ்ஞானிகள் சேர்ந்து என்னென்னவோ யோசித்து புரிவதற்க்கே மிக கடினமான பல கணிப்புகளை வைத்து கிட்டதட்ட ஒரு தவம் போல ஒரு வாழ்கை வாழ்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு விண்கலத்தை (அஃறினை) நிலவுக்கு செலுத்துகிறார்கள்.
ஆனால் நம் கவிஞர்கள் இந்த கஷ்டம் எதுவும் இல்லாமல் மிக சுலபமாக நிலவுக்கு போய்விட்டு வந்துவிடுவார்கள். உதரணத்திற்கு பல பாடல்களை சொல்லலாம். முக்கியமாக வைரமுத்து அவர்களின் அநேக பாடல்களை கேட்டுப் பார்த்தால் புரியும்.
என்னை பொறுத்தவரை இதுவும் கிட்டதட்ட ஒரு தவ வாழ்க்கை போலத்தான். எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை கவிதை.
கவிஞர்களின் மூளை வேகமும் அவர்களின் யோசிக்கும் திறனும் இன்னும் வியப்பு. உதரணமாக கவி. வாலியிடம் அவரது ஆசிரியர் கேட்டாராம் …