பிரித்தாளும் வித்தையை முதலில் நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ். பிறகு அதே டெக்னிக்கை வைத்து இந்தியாவுக்குள்ளேயே படுத்திக்கொண்டிருப்பவர்கள் நமது மாண்புமிகு அரசியல்வாதிகள். தம்மால் முடிந்தவரை முயற்சி செய்தாகிவிட்டது. அப்படியொன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை எனற காரணத்தாலும், அவரவர் இருட்டு வேலை குருடர்களுக்கும் கூட வெட்ட வெளிச்சமாகிவிட்ட காரணத்தாலும், ”குட்டிக் குட்டி” பயங்கரவாதங்களில் ஆரம்பித்து ”அதெல்லாம் எங்களிடம் நடக்காது” என்று நாமிருந்ததினால் வேறு பல யுத்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர் போலும்.
இதற்குமேல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நாட்டைக்காக்கும்(?) ஒரே வெறியோடு ”குட்டி” கொஞ்சம் பெரிதாக, வெடிகுண்டு சம்பவங்களை நமக்கு காண்பித்து பயத்தை அதிகரித்தனர். இப்போது அதுவும் சர்வ சாதரணமாகிப் போக, இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்றெண்ணியபோது சீனா கைகொடுக்கிறது போலும். கொஞ்ச நாள் முன் எனக்கு அலுவலக நண்பர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். அதில் சீனாவை சார்ந்த ஒருவர்(பீஜிங்கை சேர்ந்த சான் ல்யூ) பகிரங்கமாக இந்தியாவை துண்டு துண்டாக பிரித்து, கிட்டத்தட்ட 20-30 குட்டி மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்றும், அந்த மாநிலங்களுக்கு தனித்தனி நாட்டுரிமை தரப்படவேண்டுமென்றும் கூறுகிறார்.
குறிப்பாக அந்த உரையின் ஆசிரியர் சீனா அசாம், தமிழ்நாடு மற்றும் காஷ்மீருடன் சேர்ந்து அந்தந்த மாநிலத்துக்கு தனி குடியுரிமையை ஸ்தாபிக்க உதவ வேண்டும் என்கிறார். மேலும் பீஜிங் அரசு அரசியல் ரீதியாக நட்பு நாடான வங்காள்தேசத்துக்கு உதவி, இந்தியாவில் இருக்கும் பெங்காலிகளை வங்காளதேசத்தின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சுருங்கச் சொன்னால் இந்தியாவை ஐரோப்பாவை போல மாற்றவேண்டும் என்கிறார்.
இந்த உரையை சீனா அரசும் கூட தடை செய்யாததையும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம் அரசியல் தலைவர்கள் இதை கேட்ட பின்பும் இந்தியா-சீனா உறவு நல்லுறவாகவே இருக்கிறது என்கிறது. மேலும் சீன ராணுவம் எல்லையில் செய்த அட்டூழியத்தையும் கூட அப்படியே அன்று இரவு தான் சாப்பிட்ட சாப்பாட்டில் மூடி மறைத்துவிட்டது காங்கிரஸ் அரசு. நாம் அந்த செய்தியை அதிகபட்சமாக ஒரு ரெண்டு வாரம் பேசியிருப்போமா? அரசியல் தலைவர்களுக்கென்ன, ஆளுங்கட்சியோ எதிர் கட்சியோ மூக்கு ஆப்ரேஷன் செய்துகொண்டு சீனாவில் சென்று செட்டில் ஆகிவிடுவார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் ஒருவேளை ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கிறார்களோ என்னவோ.
நம் (இமெயில்) ஃபார்வார்ட் யுகத்தில் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நடந்து கொண்டிருக்கும் தனி மாநில கலாட்டாக்களையும் அமைதிப் போராட்டங்களையும் (ஆந்திராவில் அமைதிப் போராட்டம் என்றால் ஆளுக்கொரு பஸ்ஸை கொளுத்துவது, கடைகளை உடைப்பதுதான் போலும்) பார்க்கையில் சீனா சைலண்டாக வேலையில் இறங்கியிருக்குமோ என்று தோன்றுகிறது. சத்தியமாக இதில் இந்திய மகானுபாவர்களின் கை இருக்கும் என்பது என் எண்ணம். மற்றவைகளை (அவர்கள் செய்யும் ஊழல்களையும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும்) மறக்கடிக்க நம் அரசியல்வாதிகள் உபயோகப்படுத்தும் இன்னொரு அஸ்திரமாக இருக்கலாம்.
இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் நம் மக்களின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் என் உள்மனது இந்த தனிமாநில முயற்சி தோல்வியையே தழுவும் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாடாக வளர்ந்துவிட்டதற்கு சாட்சியாக பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகரமாக சந்தித்ததை நாம் அனைவருமே அறிவோம். அப்படியிருக்க இது ஏன் நம்மை பல பிரச்சனைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப ”நம் நாட்டிலேயே நம்முடனே மக்களோடு மக்களாக இருக்கும் புல்லுருவிகளின் வேலையாக இருக்காது” என்று யோசிக்க வைக்கிறது.
நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்லவே. புதிது யுத்திதானே ஒழிய நோக்கம் அல்ல. எந்த செய்தித் தொலைக்காட்சியை திருப்பினாலும் சந்திரசேகர் ராவ் முகத்தில் ஆக்ஸிஜன் வைத்து காட்சியளிக்கிறார், உடைந்த பேருந்துகள், திரும்பி ஆந்திராவுக்கு போக முடியாமல், வருமானமும் இல்லாமல், செலவுக்கும் போதிய பணம் இல்லாமல் வாடும் ஓட்டுனர்கள் என்று எந்த யுக்தியானாலும் பாதிப்பை நமக்கே கொடுக்கிறது நம் இந்திய திருநாட்டின் அரசியல்.
தெலுங்கானாவில் ஆரம்பித்து இப்போது நம் ஐயா அவர்கள் தன்னிசையாக தமிழ்நாட்டை பிரிப்பதை வரவேற்கிறேன் என்று அறிக்கை விடுவதெல்லாம் பார்த்தால் அடுத்து தமிழகத்திலும் ஜாதிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆந்திராவைப் போலவே நம் தமிழகத்திலும் அமைதிப்போராட்டங்கள் ஆரம்பித்துவிடும்.
அங்கே மேற்கே மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் கோரிக்கை இப்போதுவரை புரிலா, பங்கு்ரா மற்றும் மித்னாபூரின் மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுமே. அது நம் கம்யூனிஸத் தோழர்களின் உசுப்பலில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்றாலும், என்றைக்கு அவர்கள் அவைகளை தனி மாநிலங்களாக கேட்பார்கள் என்ற பீத்யில்தான் அம்மாநில அரசும் மத்திய அரசும் இருக்கும்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே ஆந்திராவில் இன்னொரு கூட்டம் வேறு ஒரு மாநிலத்துக்கு அடிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகளால் நாம் பலவற்றை மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். அவைகளில் என் ஞாபகத்திற்கு வரும் சில மறந்துபோனவைகள்:
1. சத்தியம் ராஜு சொத்துக் குவிப்பு
2. சமீபத்தில் மெயிலில் வந்த இறந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி சொத்துகுவிப்பு
3. ஆளுங்கட்சியின் நதிகள் இணைப்புத் திட்டம் இயலாமை
4. இலங்கை அகதிகளின் நிலைமையில் நம் அரசின் நிலைப்பாடு
5. பாபர் மசூதி வழக்கு அறிக்கை
6. உழவர்களுக்கு தலா ரெண்டு ஏக்கர் நிலம்
7. செல்வி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு
8. ஆருஷி கொலை வழக்கின் தற்போதைய நிலை
9. பெங்களூர், அஹமதாபாத், டெல்லி தொடர் குண்டு வெடிச்சம்பவங்கள்
10. தினகரன் ஆபீஸ் எரிப்பு
11. போபர்ஸ் ஊழல் விவகாரம்
12. சேதுக்கால்வாய் திட்டம்
13. 75 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கிப் பணம் (100 நாட்களில் மீட்போம் என்று சொல்லி 100 நாள் மேலே படத்தை ஓட்டிட்டாங்கய்யா….ஓட்டிட்டாங்கய்யா!!! அவ்வ்வ்வ்வ்வ்…)
14. இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் அட்டூழியங்கள்
இந்த தனி மாநில கோரிக்கைகளை பற்றியெல்லாம் படிக்கும் போது சீன மாணாக்கர் சொன்னதை சீனா ந்ம நாட்டுப் புல்லுருவிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வெற்றிகரமாக செய்துவருகிறதா என்று சந்தேகம் எழுகிறது. இல்லை இது நம் அரசியவாதிகளின் கூத்தே என்பதற்கு தகுந்த சான்று வெளிவந்தால் மனது கொஞ்சம் நிம்மதி அடையும். ஆங்கிலத்தின் ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல். அதற்காக சீனாவை தேவதை என்று சொல்வதாக நினைக்கவேண்டாம். பிசாசு யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா என்ன?
இந்த ஸ்ப்லிட் இண்டியா மூவ்மெண்ட்டிலிருந்து நம் நாட்டைக் காக்க இன்னொரு க்விட் இண்டியா மூவ்மெண்ட் தேவைப்ப்டுகிறது. ஆனால் யாரை க்விட் செய்யச் சொல்லவேண்டும்?
ஒருவேளை இந்த தனிமாநில கோரிக்கைகள் சாத்தியமாகிப் போனால், வடிவேலுவின் ஒரு நகைச்சுவைக் காட்சியில் வருவது போல ஆண்டிப்பட்டியிலிருந்து அரசம்பட்டிக்கு வர விசா எடுத்திருக்கவேண்டும். தனிமாநிலங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவுகளை நகைச்சுவைக் கோணத்தில் அடுத்த பதிவில் பார்க்க முயற்சிப்போம்.
பிரித்தாளும் வித்தையை முதலில் நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ். பிறகு அதே டெக்னிக்கை வைத்து இந்தியாவுக்குள்ளேயே படுத்திக்கொண்டிருப்பவர்கள் நமது மாண்புமிகு அரசியல்வாதிகள். தம்மால் முடிந்தவரை முயற்சி செய்தாகிவிட்டது. அப்படியொன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை எனற காரணத்தாலும், அவரவர் இருட்டு வேலை குருடர்களுக்கும் கூட வெட்ட வெளிச்சமாகிவிட்ட காரணத்தாலும், ”குட்டிக் குட்டி” பயங்கரவாதங்களில் ஆரம்பித்து ”அதெல்லாம் எங்களிடம் நடக்காது” என்று நாமிருந்ததினால் வேறு பல யுத்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர் போலும்.
இதற்குமேல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நாட்டைக்காக்கும்(?) ஒரே வெறியோடு ”குட்டி” கொஞ்சம் பெரிதாக, வெடிகுண்டு சம்பவங்களை நமக்கு காண்பித்து பயத்தை அதிகரித்தனர். இப்போது அதுவும் சர்வ சாதரணமாகிப் போக, இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்றெண்ணியபோது சீனா கைகொடுக்கிறது போலும். கொஞ்ச நாள் முன் எனக்கு அலுவலக நண்பர் ஒருவர் இமெயில் அனுப்பியிருந்தார். அதில் சீனாவை சார்ந்த ஒருவர்(பீஜிங்கை சேர்ந்த சான் ல்யூ) பகிரங்கமாக இந்தியாவை துண்டு துண்டாக பிரித்து, கிட்டத்தட்ட 20-30 குட்டி மாநிலங்களை உருவாக்க வேண்டுமென்றும், அந்த மாநிலங்களுக்கு தனித்தனி நாட்டுரிமை தரப்படவேண்டுமென்றும் கூறுகிறார்.
குறிப்பாக அந்த உரையின் ஆசிரியர் சீனா அசாம், தமிழ்நாடு மற்றும் காஷ்மீருடன் சேர்ந்து அந்தந்த மாநிலத்துக்கு தனி குடியுரிமையை ஸ்தாபிக்க உதவ வேண்டும் என்கிறார். மேலும் பீஜிங் அரசு அரசியல் ரீதியாக நட்பு நாடான வங்காள்தேசத்துக்கு உதவி, இந்தியாவில் இருக்கும் பெங்காலிகளை வங்காளதேசத்தின் கீழ் ஒன்று சேரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சுருங்கச் சொன்னால் இந்தியாவை ஐரோப்பாவை போல மாற்றவேண்டும் என்கிறார்.
இந்த உரையை சீனா அரசும் கூட தடை செய்யாததையும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம் அரசியல் தலைவர்கள் இதை கேட்ட பின்பும் இந்தியா-சீனா உறவு நல்லுறவாகவே இருக்கிறது என்கிறது. மேலும் சீன ராணுவம் எல்லையில் செய்த அட்டூழியத்தையும் கூட அப்படியே அன்று இரவு தான் சாப்பிட்ட சாப்பாட்டில் மூடி மறைத்துவிட்டது காங்கிரஸ் அரசு. நாம் அந்த செய்தியை அதிகபட்சமாக ஒரு ரெண்டு வாரம் பேசியிருப்போமா? அரசியல் தலைவர்களுக்கென்ன, ஆளுங்கட்சியோ எதிர் கட்சியோ மூக்கு ஆபரேஷன் செய்துகொண்டு சீனாவில் சென்று செட்டில் ஆகிவிடுவார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் ஒருவேளை ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கிறார்களோ என்னவோ.
நம் (இமெயில்) ஃபார்வார்ட் யுகத்தில் இதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நடந்து கொண்டிருக்கும் தனி மாநில கலாட்டாக்களையும் அமைதிப் போராட்டங்களையும் (ஆந்திராவில் அமைதிப் போராட்டம் என்றால் ஆளுக்கொரு பஸ்ஸை கொளுத்துவது, கடைகளை உடைப்பதுதான் போலும்) பார்க்கையில் சீனா சைலண்டாக வேலையில் இறங்கியிருக்குமோ என்று தோன்றுகிறது. சத்தியமாக இதில் இந்திய மகானுபாவர்களின் கை இருக்கும் என்பது என் எண்ணம். மற்றவைகளை (அவர்கள் செய்யும் ஊழல்களையும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும்) மறக்கடிக்க நம் அரசியல்வாதிகள் உபயோகப்படுத்தும் இன்னொரு அஸ்திரமாக இருக்கலாம்.
இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் நம் மக்களின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் என் உள்மனது இந்த தனிமாநில முயற்சி தோல்வியையே தழுவும் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாடாக வளர்ந்துவிட்டதற்கு சாட்சியாக பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகரமாக சந்தித்ததை நாம் அனைவருமே அறிவோம். அப்படியிருக்க இது ஏன் நம்மை பல பிரச்சனைகளிலிருந்து கவனத்தைத் திருப்ப ”நம் நாட்டிலேயே நம்முடனே மக்களோடு மக்களாக இருக்கும் புல்லுருவிகளின் வேலையாக இருக்காது” என்று யோசிக்க வைக்கிறது.
நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதிதல்லவே. புதிது யுத்திதானே ஒழிய நோக்கம் அல்ல. எந்த செய்தித் தொலைக்காட்சியை திருப்பினாலும் சந்திரசேகர் ராவ் முகத்தில் ஆக்ஸிஜன் வைத்து காட்சியளிக்கிறார், உடைந்த பேருந்துகள், திரும்பி ஆந்திராவுக்கு போக முடியாமல், வருமானமும் இல்லாமல், செலவுக்கும் போதிய பணம் இல்லாமல் வாடும் ஓட்டுனர்கள் என்று எந்த யுக்தியானாலும் பாதிப்பை நமக்கே கொடுக்கிறது நம் இந்திய திருநாட்டின் அரசியல்.
தெலுங்கானாவில் ஆரம்பித்து இப்போது நம் ஐயா அவர்கள் தன்னிசையாக தமிழ்நாட்டை பிரிப்பதை வரவேற்கிறேன் என்று அறிக்கை விடுவதெல்லாம் பார்த்தால் அடுத்து தமிழகத்திலும் ஜாதிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆந்திராவைப் போலவே நம் தமிழகத்திலும் அமைதிப்போராட்டங்கள் ஆரம்பித்துவிடும்.
அங்கே மேற்கே மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளின் கோரிக்கை இப்போதுவரை புரிலா, பங்கு்ரா மற்றும் மித்னாபூரின் மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுமே. அது நம் கம்யூனிஸத் தோழர்களின் உசுப்பலில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்றாலும், என்றைக்கு அவர்கள் அவைகளை தனி மாநிலங்களாக கேட்பார்கள் என்ற பீத்யில்தான் அம்மாநில அரசும் மத்திய அரசும் இருக்கும்.
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே ஆந்திராவில் இன்னொரு கூட்டம் வேறு ஒரு மாநிலத்துக்கு அடிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த செய்திகளால் நாம் பலவற்றை மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். அவைகளில் என் ஞாபகத்திற்கு வரும் சில மறந்துபோனவைகள்:
- சத்தியம் ராஜு சொத்துக் குவிப்பு
- சமீபத்தில் மெயிலில் வந்த இறந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி சொத்துகுவிப்பு
- ஆளுங்கட்சியின் நதிகள் இணைப்புத் திட்டம் இயலாமை
- இலங்கை அகதிகளின் நிலைமையில் நம் அரசின் நிலைப்பாடு
- பாபர் மசூதி வழக்கு அறிக்கை
- உழவர்களுக்கு தலா ரெண்டு ஏக்கர் நிலம்
- செல்வி ஜெயலலிதா சொத்துக்குவிப்பு
- ஆருஷி கொலை வழக்கின் தற்போதைய நிலை
- பெங்களூர், அஹமதாபாத், டெல்லி தொடர் குண்டு வெடிச்சம்பவங்கள்
- தினகரன் ஆபீஸ் எரிப்பு
- சேதுக்கால்வாய் திட்டம்
- 75 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கிப் பணம் (100 நாட்களில் மீட்போம் என்று சொல்லி 100 நாள் மேலே படத்தை ஓட்டிட்டாங்கய்யா….ஓட்டிட்டாங்கய்யா!!! அவ்வ்வ்வ்வ்வ்…)
- இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் அட்டூழியங்கள்
இந்த தனி மாநில கோரிக்கைகளை பற்றியெல்லாம் படிக்கும் போது சீன மாணாக்கர் சொன்னதை சீனா ந்ம நாட்டுப் புல்லுருவிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வெற்றிகரமாக செய்துவருகிறதா என்று சந்தேகம் எழுகிறது. இல்லை இது நம் அரசியவாதிகளின் கூத்தே என்பதற்கு தகுந்த சான்று வெளிவந்தால் மனது கொஞ்சம் நிம்மதி அடையும். ஆங்கிலத்தின் ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது. தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல். அதற்காக சீனாவை தேவதை என்று சொல்வதாக நினைக்கவேண்டாம். பிசாசு யாரென்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா என்ன?
இந்த ஸ்ப்லிட் இண்டியா மூவ்மெண்ட்டிலிருந்து நம் நாட்டைக் காக்க இன்னொரு க்விட் இண்டியா மூவ்மெண்ட் தேவைப்ப்டுகிறது. ஆனால் யாரை க்விட் செய்யச் சொல்லவேண்டும்?
ஒருவேளை இந்த தனிமாநில கோரிக்கைகள் சாத்தியமாகிப் போனால், வடிவேலுவின் ஒரு நகைச்சுவைக் காட்சியில் வருவது போல ஆண்டிப்பட்டியிலிருந்து அரசம்பட்டிக்கு வர விசா எடுத்திருக்கவேண்டும். தனிமாநிலங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அதன் விளைவுகளை நகைச்சுவைக் கோணத்தில் அடுத்த பதிவில் பார்க்க முயற்சிப்போம்.
வழக்கம் போல பிடிச்சிருக்கோ இல்லையோ உங்களின் நாட்டுப்பற்றை காண்பிக்க இன்னொரு அருமையான சந்தர்ப்பம்…அதாங்க…ஓட்டுப் போடறது…கூடவே மறுமொழிகளும்.
//ஆண்டிப்பட்டியிலிருந்து அரசம்பட்டிக்கு வர விசா எடுத்திருக்கவேண்டும்.//
அதுக்குதான் ஜாதி பெயரை சொல்லி ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் அடி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..
வேதனையான விஷயம் சார் இது…
In future, we may become ‘Divided States of India’…
(
அன்பு மணி, இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தால், அந்த சீன மாணாக்கரின் உரையில் இந்தியா, ஹிந்துயிஸம் என்றெல்லாம் உளறிக் கொட்டியிருக்கிறார். நான் எதை யாரை குறிப்பிடுகிறேன் என்று புரிந்ததல்லவா?
ச்சின்னப்பையன் சொல்லாதீர்கள் அப்படியெல்லாம். நடந்துவிட்டால் பலப் பிரச்சனைகள் வெடிக்கும். சொன்னவுடன் தோன்றுவது தண்ணீர் பிரச்சனை….அடுத்து கலாச்சார சீரழிவு…
Romba Nalla Sollierukinga sir
நன்றி சகோதரா…
தெரியாத தேவதையைவிட தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல்
சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள். நல்ல இடுகை. வாழ்த்துகள்.
super posting nu appreciate panratha..! ulla irukira matter kaga varutha paduratha..!
Tirunelveli ya thani naadu aaka enna pannanum naan??? (what are all the documents required, like salary certificate, 3 months bank statement… plz write a post about this)
ஆமாம் பாலா.
ரோஸ்விக்: உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
ரெண்டையுமே பண்ணிடுங்க ஆண்டோ. எதுக்கு குழப்பம்.
திருநெல்வேலியை தனியா பிரிக்க ஆவணங்கள், மற்றும் பிரிப்பதினால் ஏற்படும் விளைவுகள் கூடிய விரைவில்.
neengal kuricha karuthukal anaithum unmai idhu china vin seyal mattum alla, nam politician kalin valeyum than mukkiya pangu, neengal kuripita vatril innum ondru mutthirai thal mosedi athai maranthu vittiergal
வாங்க சலீம். கருத்துரைக்கு மிக்க நன்றி.
ஒன்று சலீம், அநேக நண்பர்கள் (வாசகர்கள்) இதை ஆமோதித்திருந்தாலும் நாம் இதை ஊர்ஜிதப்படுத்த முடியாதவரை, இது வெறும் அனுமானமாகத்தான் இருக்கும். அப்படி ஒரு நிலை நம் நாட்டு அரசியலில் இருக்குவரை, நாம் ஆளப்படுகிறவர்கள்தான்.
விடியும்வரை காத்திருப்போம். கலாம் சொன்னதுபோல இன்றைய விதை நாளைய மரம்.
நல்ல இடுகை… எழுத்து நடையும் அருமை…
ஆனால் இது குறித்த எனது பார்வை வேறு..
இன்னொரு நண்பனின் தளத்தில் நான் கூறியது
“தெலுங்கானா தனி மாநிலம் எதற்காக கேட்கிறது என்பதின் அடிப்படையை
முழுதும் புரிந்தால் நாம் அதை குறித்து விவாதிக்கலாம். இல்லாவிட்டாலும்
கூட அதை ஏளனப்படுத்தாமல் விட்டு விடுவதே சால சிறந்தது.
இல்லாவிட்டால் இலங்கையில் எதற்கு தனிஈழம் என கேட்கும்
மலையாளிகளை போல் ஆக நேரிடும்.”
கருத்துக்கள் வேறாக இருந்தாலும் நண்பராக தொடர்ந்து பயணிப்போம்..
புரிகிறது சார்.. நாம் இயல்பிலேயே அடங்கிப் போவதால் அவர்களும் ஏதோ அல்ப சந்தோஷம் பெறுகிறார்கள்.. விட்டுத் தள்ளுங்க.. ஆனால் நமது திறமை என்பது அவர்களுக்கும் தெரியும் என்பதே உண்மை…
வாங்க கண்ணா வாங்க…..நட்பிற்கு நன்றி…நண்பனாக உங்களின் வரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு நல்ல நண்பனாக நான் நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஒத்துக்கொள்ளமாட்டேன். ஈழத்தமிழர் பிரச்சனையும் தெலுங்கானாவையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க முடியாது.
ஈழத்தமிழர் பிரச்சனை எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதையும், அங்கே தமிழர்கள் அவதிப்படுவதையும் நாம் படித்திருக்கிறோம்.
அதே சமயத்தில் அங்கேயே உள்ள இதர தெலுங்கர்கள் கூட இந்த தெலுங்கானா திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்துகின்றனர்.
எனக்கு தெரிந்தவரை, சந்திரசேகர் ராவ் ஆந்திராவில் தனிப்பெரும் ஆட்சியமைக்க முடியாது என்ற முக்கிய காரணத்தாலும், இதர பணக்காரணத்தாலுமே போராட்டம் நடத்துகிறார்.
இதையும் மீறி மேலே சொன்னவைகள் இல்லையென்றால், எனக்கு புலப்படும் அடுத்த காரணம் நம் மத்திய அரசே சில காரணங்களுக்காக பணம் கொடுத்து தூண்டிவிட்டிருக்கலாம்.
உங்கள் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்.
தெரிந்தால் சரிதான் அன்புமணி.
அன்பு விஜயசாரதி,
தெலுங்கானா குறித்து நமக்கு அதிகம் தெரியாததால் அதை ஏளனப்படுத்த வேண்டாம் என்பதுதான் என் மைய கருத்து. மற்றபடி அது சரியா.? தவறா ? என்பது குறித்து எனக்கு அதிகம் தெரியாது.
உங்களின் விளக்கத்திற்கு நன்றி..
தொடர்ந்து பயணிப்போம்..
கண்ணா, என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பன் ஒருவன் ஆந்திராவைச் சேர்ந்தவன். அவன் என்னிடம் பேசும்போது தான் ஊருக்கு செல்ல இயலாத வருத்தத்தை தெரிவிக்கும்போது எனக்கு உங்கள் கருத்துரை ஞாபகம் வர, அவனிடம் விசாரித்தேன். அவன் சொன்னதை சுருக்கமாக:
இந்த தெலுங்கானா சம்பவத்திற்கு முன் ஆந்திராவில் ஹாட் சுரங்க ஊழல். இப்போது கொஞ்சம் பொறித்தட்டியிருக்குமே உங்களுக்கு. இப்போது அதை பற்றிய செய்தியே இல்லை என்கிறான். நம் நாட்டின் யதார்த்தம் இவ்வளவே…
Leave your response!
மணல்கயிறு அப்டேட் வேணுமா?
Recent Posts
Archives
Categories
எனக்கு பிடித்தவை
Tags
கடைசியா வாங்கிய திட்டு
Most Commented
Most Viewed