Home » Archive

Articles Archive for September 2009

சிந்தனைகள், பொது »

[14 Sep 2009 | 3 Comments | 96 views]

என் தந்தை இறந்த பிறகுதான் எனக்கு கடவுளுடனான நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இப்படிச் சொன்னால் பைத்தியம் என்று கூறி உன்னை பாண்டி மடத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள் என்று வழக்கம் போல என் மனசாட்சி சொன்னதால், அதே விஷயத்தை கொஞ்சம் மாற்றி கூறுகிறேன். என் தந்தை இறந்த பிறகுதான் எனக்கு கடவுளை நெருங்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கொஞ்சம் பரவாயில்லை தானே?
அந்த சமயத்தில் தான் எனக்கு வேளுக்குடி ஸ்ரீ உ.வே. கிருஷ்ணன் அவர்களை கேட்கும் வாய்ப்பும் வந்தது. அவர் சொல்லும் விஷயங்களை விடுங்கள், அவரின் குரலை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். நீங்கள் மயங்கிப் போவதற்கு நான் பொறுப்பு. குரலே இப்படியென்றால் அவர் சொல்லும் விஷயங்கள். ஆச்சரியமான ஒன்று என்னவென்றால் அவர் மற்ற மதங்களையோ அல்லது மனிதர்களை கடுகளவிற்குக் கூட தாழ்த்தியோ அல்லது குறையோ கூறுவது கிடையாது.
ஒருவர் சொல்ல …