Articles Archive for August 2009
இந்திய சினிமா, சினிமா இசை, தமிழ் சினிமா »
எவ்வளவு பேர் வந்தாலும் என்ன வேஷம் கட்டினாலும் உன்னைப் போல வருமான்னு தான் கேட்கத் தோணுது நம்ம உலக நாயகனை பார்த்தால். ”எனக்குள் ஒருவன்” படத்துல நேபாளி வேஷம் போட்டு அந்தக் காலத்திலேயே கேரக்டருக்கு ஏற்றார்ப்போலே கண்ணை இழுத்துக் கொண்டு, குரலை மாற்றிப் பேசி அட்டகாசம் பண்ணினார் கமல். அது மட்டுமா ராஜபார்வையில் ஓவியத்திலிருக்கும் நிழல் உருவங்கள் நிஜமாக உருவெடுத்ததை கண்டோம். சில காரக்டர் கமல் தைரியமா எடுத்து பண்ணியது போல் வேறு எந்த பெரிய ஹீரோவும் பண்ணியதில்லை(உதாரணம்: அன்பே சிவம்,அது கூட ஏதோ ஆங்கிலப்படம் காப்பியாம்).
விக்ரம் படத்தில் செய்யாத புதுமைகளா?
தொழில்நுட்பமும் மேக்கப் கலையும் அவ்வளவாக வளராத அந்த சமயத்துலேயே அப்படி ஜமாய்த்த போது, இப்போது இருக்கும் சூழலில், தற்போது தசாவதாரம் வெற்றியடைந்திருக்கும் நிலையில் “உன்னைப் போல் ஒருவன்” வெள்ளித்திரைக்கும் மிக அருகில். கேட்க …
