Articles Archive for May 2009
பொது »
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்
குயனை வேண்டி – கொண்டு
வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி
போட்டுடைத்தாண்டி
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பணம் 10 அல்ல 28 செய்திருக்கிறது. தமிழன் தன்மானத்தை விற்றுவிட்டான். தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு மின்சார ரத்து திட்டமிட்ட சதியா அல்லது கலைஞர் சொன்னது போல அமூக விரோதிகளின் சதியா? நான்கு சமூக விரோதிகள் பிடிபட்டனர் (அன்றே) என்ற செய்தி வந்தும், அந்த நான்கு பேரை வெளிச்சத்துக்கு கொண்டுவராததேன்? ஒரு வேளை அவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதாக வாக்களித்தனரோ? இப்படி மொத்தமாக பணத்தை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. இன்னும் சில காரணக்களும் உண்டு.
தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளும் முற்றிலும் பொய்யாய் போனது. தமிழக அளவிலும் சரி தேசிய அளவிலும் சரி, மக்கள் வாக்களித்து தேர்த்தெடுத்தது கொஞ்சம் என்றால், ஆளுங்கட்சி தன் பண …
