Articles Archive for March 2009
இந்திய சினிமா, சினிமா இசை, பொது »
ரஹ்மானை எல்லோரும் பாராட்டி ஆகிவிட்டது. இன்னும் அது கண்டிப்பாக ஓய்ந்திருக்காது. ஊடகங்களுக்கு தெரியாமல் ரஹ்மானின் போனிலும், வீட்டிலும் வாழ்த்துக்களும் பூங்கொத்துக்களும் உலகின் வெவ்வேறு திசைகளிருந்து வந்து கொண்டுதான் இருக்கும்.
எல்லாவற்றையும்விட எனக்கு பிடித்தது தென்னிந்திய இசையமைப்பாளர்கள் சேர்ந்து நடத்திய பாராட்டு விழாவே. அதிலும் பல தரப்பட்ட மக்கள் ஊடகங்களின் திரித்து எழுதும் சற்றும் உண்மையில்லாத செய்திகளால் இளையராஜவுக்கும் ரஹ்மானுக்கும் பிரிவினை பேசி வந்ததற்கு முற்று புள்ளி வைத்தாற் போல் அமைந்த இளையராஜாவின் பேச்சும், எம் எஸ் விக்கு இன்னும் கெளரவப்படுத்தாததை எடுத்துக் காட்டிய சரவணனின் பேச்சும் மேலும் சுவை சேர்த்தது. இது சற்று காலதாமதமான பதிவென்றாலும் இன்னும் நம் அனைவரின் மனதை விட்டு அகலாத ஒன்றாகவே நான் கருதுகிறேன். பேசியவர்களும் பெரியவர்கள் (வித்தகர்கள்), பேசிய வார்த்தைகளும் சிறப்பானது.
இருந்தாலும் நாம் அதை பற்றி பேசாமல் ரஹ்மான் வாங்கிய விருதுகளை …
