Articles Archive for March 2009
அனுபவம், பொது »
உறவுக்காரர் ஒருவரின் மகளின் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேப்பம்பட்டு வரை செல்ல நேர்ந்தது. சுஜாதாவைப் போல அதில் கற்றதும் பெற்றதும் எழுதலாம் என்றெண்ணி இந்த பதிவு.
கற்றது:
கால்டாக்ஸி, ஆட்டோ, இரு/நாற்சக்கர வாகனங்களை விட மெட்ரோ ரயில் பயணம் சுகம் மற்றும் மலிவும் கூட. ப்ராயண நேரமும் அதிகம் இல்லை. எல்லாவற்றையும் விட சென்று வந்ததற்கான உடல் வலி ஆதாரங்கள் எதுவும் தென்படாதது இதன் மற்றொரு சிறப்பு.
மெட்ரோ ரயில் உபயத்தில் பயணித்தது இது இரண்டாம் முறையே. இதற்கு முன் தாம்பரம் செல்வதற்காக மெட்ரோ ரயிலினேன்.
திருவல்லிக்கேணியிலிருந்து 38சி பிடித்து சென்னை செண்ட்ரல் செல்ல ரூ2ம், அங்கிருந்து வேப்பம்பட்டு ரூ8 (ஒருவருக்கு) மட்டுமே தேவைப்பட்டது. இதுவே ட்ராவல்ஸ் எடுத்திருந்தால் குறைந்தபட்சம் ரூ1200 பிடித்திருக்கும். அதுமட்டுமில்லாது, நாங்கள் குடும்பமாக சென்றதால் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு போக முடிந்தது.
காரில் சென்றிருந்தால் இன்னொருவர் …
