ஐயா….அம்மா…..ஒரு பின்னூட்டம் போடுங்கம்மா….
தலைப்பை பார்த்துவிட்டு மேலே படிக்காமல் நேராக பின்னூட்டப் பகுதிக்கு போய் ஒரு குத்து குத்தறவங்களுக்கு “உங்கள் கனவு, ஆசை எதுவாயிருந்தாலும் அது பின்னூட்டம் போட்ட அடுத்த நிமிசம் நெனவாகனும், நிறைவேறனும்னு நம்ம ப்ளாகர் குலதெய்வம் ப்ளாகர்பட்டி இடுகைச்சாமிக்கிட்ட வேண்டிகிட்டு காவடி எடுப்பேன்”. இத முழுசா படிச்சிட்டும் பின்னூட்டம் போடாதவங்களுக்கு கண்டிப்பா சாபம் கொடுக்க மாட்டேன். ஆனா உங்க கனவு ஆசை எல்லாம் எனக்கு பின்னூட்டம் போட்ட பிறகுதான்..சரியா…? என்னது சரியில்லயா…..என்ன குலதெய்வத்தோட வரம் கிடைக்கறதுன்னா அவ்வளவு சுளுவா….
இப்போ சொல்ல வர்ற மேட்டர் அது இல்லீங்கோ…
இந்த எழுத்து, எண்ணங்கள் இதையெல்லாம் போடறது எவ்வளவு கஷ்டமோ அதவிட ரெண்டு மடங்கு கஷ்டம் பின்னூட்டம் போட வெக்கறது. கிட்டதட்ட பிச்சையெடுக்காத குறைதான் போங்க. தேர்தல்ல ஜெயிக்க எப்படி வோட்டு வேட்டைல நடக்குமோ கிட்ட்தட்ட அத மாதிரி தான். விசேஷம் என்னன்னா இதுலயும் கூட்டணி எல்லாம் வெச்சுக்கிறாங்க. தப்பில்லை, ஏன்னா, இது சந்தர்பவாத கூட்டணி இல்லை, தானா சேர்ந்த கூட்டணி.
ஒரு இடுகை போட்டவுடனே நமக்கு தோணுகிற அடுத்த எண்ணம், நமக்கு தெரிஞ்சவங்கள புடிச்சு, படிச்சியா? எப்படி இருந்தது? கமெண்ட் போட்டியா?ன்னு கழுத்தறுக்கறதுதான். பாவம் தெரியாம தெரிஞ்சவங்களா போயிட்டாங்க. வந்துட்டான்யா….வந்துட்டான்யா?ன்னு மனசுக்குள்ள வடிவேலு ரேஞ்சுக்கு புலம்புவாங்க. ஆனாலும் வெளிய காட்டிக்காம பொய் புன்னகையோட, ”ஹும்…பார்த்தேன்..பிரமாதம்…அட்டகாசம், ரொம்ப நல்ல எழுதியிருக்கே….அப்படி இப்படின்னு ரீலு மேல ரீல விட்டுட்டு நேரா ப்ளாகுக்கு (அப்பத்தான் அந்த ப்ளாகுக்கே போயிருப்பாங்க) போய் அதையே கமெண்ட்லையும் போட்டுட்டு போய்டுவாங்க. அந்த கமெண்ட்ஸ பார்த்தவுடனே ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் போல எதையோ சாதிச்சுட்ட பெருமை. ஏன் இந்த விளம்பரம்? சினிமாக்கரங்கதான் அவுங்க படம் ஓட செய்யறாங்கன்னா? அப்படின்னு கவுண்டமணி ஸ்டைல்ல மனசாட்சி கேட்கும் போது நாம திருவிழால காணாமப் போன செந்தில் மாதிரி மூஞ்ச வெச்சுக்கறது பழக்கமா போச்சு. மனசாட்சிகிட்ட திரும்ப அதே கவுண்டமணி ஸ்டைல்ல “ஹே..ஹே….ஹ்ஹா..ஹ்ஹா…அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”ன்னு சொல்லி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இறங்கிடுவோம். என்னவா? அடுத்த பிச்சைதாங்க அது? சார், கமெண்ட் ப்ளீஸ்…(இங்கிலீசு பிச்சை)
தெரிஞ்சவன், அறிஞ்சவன், சொறிஞ்சவன்னு ஒருத்தரையும் விட்டுவைக்காம எல்லார்கிட்டேயும் தமிழ் பிச்சை கேட்ட்துபோக, ஆபிஸுக்கு போய் அங்க நம்ம கூட வேலை செய்யற யாரையும் விட்டு வைக்கறது இல்ல. அவன் என்ன வேலையா இருக்கான்? மானேஜர் கிட்ட அப்பத்தான் வாங்கி கட்டிகிட்டு வந்திருப்பான் பாவம். நாம போய்….ஹி…ஹி….என்ன மச்சான், என்ன மீட்டிங் (டேய் டாபர் மீட்டிங் இல்லடா திட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்..கேட்கறான்பாரு…அப்படின்னு நம்மள மன வானலியில் போட்டு வதகிட்டு இருப்பான்) அப்படி இப்படின்னு ஃபார்மாலிடிக்கு ரெண்டு கேள்வி கேட்டுட்டு, ”அப்புறம் மச்சான், படிச்சியா?” (மனசுக்குள்ள ஆமா, ஜாவால ஏதோ புதுசா வந்திருக்காம், அதை இன்னும் ஏன் படிக்கலைன்னு மானேஜர் உயிர வாங்கறான். இதுல எவன் வேறே)…ஹி…ஹி..ஹி…தோ அங்கதான் போயிகிட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுன்னுவான். ரொம்ப பாவம்.
யாஹூ, கூகுல் டாக்குன்னு எதையும் விட்டுவெக்கறது இல்ல. சகட்டு மேனிக்கு எல்லாரையும் ஹாய் சொல்லி கூப்பிட்டு படிச்சியான்னு கேட்கலைன்னா நமக்கு அன்னிக்கு தூக்கம் சரியா வராது அடுத்த நாள் காலையில வர வேண்டியது சரியா வராது. யாராவது ஆன்லைன்ல வர்றாங்கன்னு அலர்ட் வந்த போதும் நாம குஷியாயிடுவோம். அப்பா…கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தா மாதிரின்னு மனசுல நெனச்சுகிட்டு…அப்படியே ஒரு க்ளிக். அவங்களுக்கும் தெரியும் இந்த சோழியன்குடுமி சும்மா ஆடாதுன்னு.
சானல மாத்தும் போது திடீர்ன்னு சன் டிவி அதிரடி சிங்கர்ல மாட்டிக்குவோம் இல்ல அத மாதிரி ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. இருந்தாலும் இவங்களும் மேலே சொன்னது போல கடுப்ப வெளில காட்டிக்காம “ஐ எம் ஃபைன். ஹவ் அபெளட் யூ?ன்னு ரொம்ப அக்கறையா விசாரிப்பாங்க. நம்ம ஆளு, ”அதெல்லாம் விடு, என் லேட்டஸ்ட் போஸ்ட் படிச்சியா? ஹவ் ஈஸ் இட்?” ன்னு இங்கிலீசு பிச்சைக்கு அடிபோட ஆரம்பிச்சுடுவோம். ஏதோ நம்ம கிறுக்கி வெச்சுருக்கிறதே அவனுக்காக எழுதினா மாதிரியும், நம்ம ப்ளாக படிக்கறது அவன் வாழ்கையில ஒரு அங்கம் மாதிரியும் அத இதுவரைக்கும் படிக்காததே தெய்வ குத்தம் மாதிரியும் நெனப்பு. இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிபுட்டேன்.னு அந்த வீட்டு வாசல்ல ஒரு 7 பேரு கோரஸா சவுண்ட் விடறது கேட்குது. இருந்தாலும் உண்மைய சொல்லித்தானே ஆகணும். என்ன சொல்றீங்க?
சரி அப்ப்டி சொல்லிட்டு விடறோமான்னா அதான் இல்லை. பாவம் நண்பர் ஏதாவது வேலையில மும்முரமா வேலை செய்துகிட்டு இருப்பார். போய் பொழப்பை பாருன்னு அவங்களால சொல்லவும் முடியாது. இக்கட்டான சூழ்நிலையில மாட்டிகிட்டு திண்டாடிப் போயிடுவாங்க. இன்னும் உன் கருத்துக்காக காத்திருக்கேண்டான்னு நச்சரிச்சு பிடிங்கி எடுத்துடுவோமில்ல…நாமெல்லாம் யாரு?
இப்படிதாங்க நாளொரு பிச்சையும் பொழுதொரு பின்னூட்டமுமா என் எழுத்துலக வாழ்க்கையும் போக்கிட்டிடு இருக்கேன்.
இந்த க்ர்ருப்ல சேர்வது, சொறிஞ்சவன தொந்தரவு பண்றது, மெயில்ல படைப்பை அனுப்பறது மற்றும் சாட்ல பிடுங்கி எடுக்கறது தவிர வேற மாதிரி பிச்சை ஏதாவது இருந்தா தயவு செய்து தெரிவிக்கவும். அப்படி புதிதாக சிந்தித்து கருத்துரையின் மூலம் அனுப்புபவர்களில் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து கெளரவ டாக்டர் பட்டத்துக்கு சிபாரிசு செய்யப்படும்.
சரி இவ்வளவு நேரம் பின்னூட்டப் பிச்சை பத்தி பேசியிருக்கேனே, ஏதாவது பின்னூட்டம் உண்டா?
ஹும்….புரியுது….ஐயா…அம்மா…ஏதாவது பின்னூட்டம் இருந்தா போடுங்கய்யா….உங்க கருத்துரைய போடுங்கம்மா….ஐயா…..அம்மா….
போதுமா?
நிராகரிப்பு: ஒரு விஷயத்த எடுத்துகிட்டு அத பத்தி நீட்டி முடக்கி எழுதற கஷ்டம் இவங்களுக்கு எங்க தெரிய போவுது. தினமும் சிந்திக்கணும். வித்தியாசமா சிந்திக்கணும் என்ன சின்ன விஷயமா? இது. புரியாதவனுங்க இப்படித்தான் புலம்புவாங்.க கண்டுக்காதிங்க. நாமபாட்டுக்கு எழுதிகிட்டு போயிக்கிட்டே இருக்கணும்.









போட்டாச்சு… போட்டாச்சு…
போட்டாச்சு போட்டாச்சு.
போயிட்டு அப்பரம் வாப்பா (வாங்கசார்)….. ஹிஹிஹிஹி
பின்னூட்டம்
பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்பின்னூட்டம்
மீ த ஃபர்ஸ்ட்டு!
இருங்க பதிவை படிச்சிட்டு நிதானமா வரேன்!
பின்னூட்டம் போட்டாச்சு போட்டாச்சு.
1
pathivu padikkala…:)
I added my comment (hey! my wish will come true) even before reading this. But the fact is I really liked this post very much.
போட்டுட்டேன் பின்னூட்டம். பாவம்க ஆபீஸ் மக்கள் எல்லாம். கொஞ்ச நாளைக்கு விட்டுடுங்க அவங்கள.
நானும் இது மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி பின்னூட்ட பிச்சை எடுத்தேன். ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.
http://thodar.blogspot.com/2009/02/blog-post_23.html
வாங்க வீரா, கறுப்பி, மணிகண்டன்.
வீராவுக்கும் தமிழன் கறுப்பிக்கும் தற்தமது கனவுகள் இந்நேரம் கைகூடியிருக்கும்னு நினைக்கிறேன்.
மணிகண்டன்….ஆபிஸ் பிச்சைக்கு ஒரு கெளரவ பிச்சை. இப்போ நாம சொல்லியிருகாம இருந்தா யாருக்குமே தெரியவராது. இதுல என்ன ஒரு சிறப்பம்சம்னு கேட்டீங்கன்னா…நல்லா டீக்கா ட்ரெஸ் போட்டுகிட்டு எடுக்குற பிச்சை இது
//
தலைப்பை பார்த்துவிட்டு மேலே படிக்காமல் நேராக பின்னூட்டப் பகுதிக்கு போய் ஒரு குத்து குத்தறவங்களுக்கு “உங்கள் கனவு, ஆசை எதுவாயிருந்தாலும் அது பின்னூட்டம் போட்ட அடுத்த நிமிசம் நெனவாகனும்,
//
செஞ்சிட்டேன் தல!
கனவு (வேற என்ன, ஓசில ஒரு குவாட்டர்…அவ்வளவு தான்) நெனவாச்சின்னா ஒங்களுக்கு சொல்றேன் :0))
யப்பா….கண்டிப்பா சொல்லோணும்….நாங்களும் சேர்ந்துக்குவோமில்ல……என் கனவுக்கு ஒரு வாட்டர்..உங்க கனவுக்கு ஒரு குவாட்டர்..மிக்ஸ் பண்ண மேட்டர்……
இப்படிதாங்க…காலைலேர்ந்து ஒரே கவிதையா வந்து தொலைக்குது. அதையும் அடுத்த பதிவுகள்ள போடறேன். நிச்சயம் வந்து பின்னூட்டம் போடணும் (குவாட்டர் வேணுமில்ல).
//யாஹூ, கூகுல் டாக்குன்னு எதையும் விட்டுவெக்கறது இல்ல. சகட்டு மேனிக்கு எல்லாரையும் ஹாய் சொல்லி கூப்பிட்டு படிச்சியான்னு கேட்கலைன்னா//
நல்லா சொன்னீங்க. என் கம்ப்யூட்டர்ல சாட் ப்ரோக்ராம் எல்லாம் போட்டு வச்சுக்கிட்டு ஆன்லைன்லயே ஒக்காந்துகிட்டு இருப்பேன். காபி, டீ, சாப்பாடு எல்லாம் கம்ப்யூடர் முன்னாலதான். மவனே, யாராவது சைன் இன் பண்ணினான்னா போதும், மாட்னான். ஒடனே அவன புடிச்சு “அலோ ஆய்” சொல்லி ப்ளாக் ஒரல் (URL) கொடுத்துட்டுதான் மறுவேல.
பல சாட் சினேகிதனே இதுக்காகத்தான தல? இதுல ஒரே ஒரு ப்ராப்ளம் என்னன்னா, நம்ம தொந்தரவு தாங்கமுடியாம, முள்ள முள்ளால எடுக்கறாப்பல அவனும் ப்ளாக் ஆரம்பிச்சு நம்ம க.அ. செய்ய ஆரம்பிச்சுருவான். இல்லன்னா பர்மனண்டா சாட் ப்ரோக்ரம்ல “stepped out”, “Busy”, “DND” அப்டீன்னு ஸ்டேடஸ் போட்ருவான். ஆனா நாம என்ன ஆளு… அவனுக்கு ஆஃப்லைன்லயே நம்ம மேசேஜ் கொடுத்துட்டுதான உடுவோம்?
ஆபீஸ் நண்பன படிக்க வைக்கறதுல இன்னொரு உத்தி இருக்கு. படிக்காமயே அவன் போயிட்டா? அதுக்காக, அவன் கம்ப்யூட்டர்ல நம்ம உரல தட்டி லோட் பண்ணி, அவன் முதுகுக்கு பின்னால நின்னுகிட்டு, “படிச்சு பாரு”ங்கறது. அவனால ஒண்ணும் பண்ணமுடியாது. மவன ஒரு எழுத்து, ஒரு கிராமர் மிஸ்டேக் உடாம படிச்சாகணும்.
போட்டாச்சு… போட்டாச்சு
நல்லா இருக்கு.பின்னூட்டம் போட்டாச்சு.நீங்க நம்ம வலைக்கு வாங்க.சாம்பிளுக்கு
ஒரு கவிதை/கதை/கட்டுரை/ படிச்சு பின்னூட்டம் போடுங்க.நானும் சுஜாதா மாதிரி
ரெண்டு வார்த்தைக் கதைகள்/சிறுகதைகள் எழுதியிருக்கேன்.
வாழ்த்துக்கள்!
சரி… இந்தா வெச்சுக்கப்பூ!
நாளொரு பிச்சையும் பொழுதொரு பின்னூட்டமுமா என் எழுத்துலக வாழ்க்கையும் போக்கிட்டிடு இருக்கேன்.?
உங்களோட tag சூப்பருங்க. பாதி படிச்சேன். மீதி படிக்கிறேன்
அண்ணேன் நான் பிச்சை போட்டுடேன் ..எனக்கும் வந்து கொஞ்சம் பாத்து ஏதாச்சும் போட்டுட்டு போங்க ..
நன்றிங்க பின்னூட்டம். அது சரி அது என்ன அத்தனி பின்னூட்டம் (பின்னூட்டம்1) போட்டுபுட்ட நைனா? அத்தினி கனுவா வெச்சிகிற? எல்லான் அந்த கடுவுள் பிண்ணியத்துல நெறவேறிடும்பா..அ…ஆங்…..
நெசமாலுமே என்ன பிச்சைக்காரன் ஆக்கிப்புட்டியே வாத்தியாரே….இன்னாவோ போ..ஒண்ணியுமே பிரியல வொலகத்துல…இன்னாமோ நடக்குது மேட்டரா இருக்குது….
ச்சின்னப்பையன், கிருஷ்ணன், தமிழ் பிரியன், ஞானசேகரன்:
சாமி…பின்னூட்டபிதாக்களே…பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றிங்கையா…….
இதோ வர்றேன் சாமி…இன்னிக்கி உங்க பேசின நிரப்பாம போறதில்லைன்னு பின்னூத்தம்மனுக்கு சத்தியம் செஞ்சுக்கறேன் சாமி………ஐயா…….அம்மா……….
ஏன் சார் இங்க சிபி வந்தாரே பார்த்தீங்களா..தோ வர்றேன்னு சொல்லிட்டு போனார்…
ரவிசங்கர்….அட ஆமாங்க இது ஒருவகை பிச்சை..இத எழுதல பாருங்க…ஹலோ…எ…என்னங்க…ஹலோ..பேச்..சு பேச்சா இருக்கணும்..எதுக்கு இப்ப மவுச தூக்கறீங்க…
செல்வந்தன்….ரெம்ப நன்றிப்பா…
ஆமாங்க புகழினி..என்ன செய்ய சொல்லுங்க…வால்க அப்படி ஆகிபோச்சுது…
நன்றி குடுகுடுப்பை…படிங்க..படிச்சு இன்னும் பின்னூட்டம் போடுங்க…
சரி ஆண்ட்ரு அண்ணே…நிச்சயமா…
சத்தியமூர்த்தி…நீங்களும் நம்ம பார்ட்டிதான் போல..
ஆமாங்க…இன்னிக்கி கூட ஒரு கலீக்க பிடிச்சு ஒரு வழி பண்ணியாச்சு….
இனிமே இண்ட்ர்னெட் பக்கம் போவனான்னு ஆயிட்டான் பாவம்….
எனக்கு ஒண்ணும் தெரியாது….ங்கண்ணா…………..
போட்டாச்சு போட்டாச்சு.
வாங்க நசரேயன்……
இந்த போட்டாச்சு போட்டாச்சு நிஜமாவே நாம ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா நம்ம நண்பரோட பேசும் போது யாராவது வந்து பிச்சைக்கேட்டா ஒரு வித (டிஸ்டர்ப் பண்றானேன்னு) கோவத்தோட நம்மளால முடிஞ்சத போடுவோமே….அந்த கோவம் பிச்சைக்காரன் மேல இல்ல…அவன் பிச்சை கேட்டானேன்னு கோவம் இல்ல….
கரெக்ட்டா நசரேயன்….(இது ஒரு வித பிச்சைதான்…ஆமாங்க ஏதோ ஒரு கருத்தை சொல்லி உங்க கழுத்தை அறுத்து…அது சரியா இல்ல தவறான்னு கேட்டா….ஒரு பதில் போட்டாகணுமே. அது தமிழர் பண்பாடாச்சே….(கடந்த சில நாளா பிச்சைக்கான நெறைய ஐடியா தோணுதே)
நானும் ஆஜரானதுக்கு சாட்சியமா இதை போட்டுடறேன்..
விஜயசாரதி சில சமயங்களில் பின்னூட்டம் போடுவதற்கு முயல்பவர்கள்கூட சட்டென்று சோம்பேறித்தனப்பட்டு போவது ஏனெனில் இப்போது நீங்கள் வைத்துள்ளீர்களே இது மாதிரியான பின்னூட்டப் பெட்டிகள்தான்..
இதில் பின்னூட்டத்தை டைப் செய்துவிட்டு பின்பு மேலே உள்ள மூன்று இடங்களில் பெயர், மெயில் முகவரி, வெப்சைட்டின் முகவரியை டைப் செய்ய வேண்டும்.
இதற்காக தமிழ் டைப்பிங் மெத்தெட்டிற்கான சாப்ட்வேரை ஆஃப் செய்ய வேண்டும். பின்பு மேலே வந்து மூன்றையும் டைப் செய்ய வேண்டும்..
ஏன் ஓடுகிறார்கள் என்பது புரிகிறதா..?
உங்களுக்கென்று இல்லை.. இது மாதிரியான பின்னூட்டப் பெட்டிகளை வைத்திருக்கும் பலருக்கும் இது போலத்தான் நடக்கிறது.
நல்ல பகடி. அருமை.
உண்மைத்தமிழன்…உண்மை தமிழன். மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன். ஆனால் சொன்ன கருத்து பிடித்திருந்து பின்னூட்டம் போட்டு விட்டுதான் தங்கமணிக்கு அடுப்படி வேலைகளில் உதவ ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால்..மூன்று பெட்டியல்ல முன்னூறு பெட்டியானாலும் போடுவார்கள்தானே.
என்ன பண்றது முரளிக்கண்ணன்….வீட்ல நம்மள கிழி கிழின்னு கிழிக்கறாங்க…ஒரு பின்னூட்டத காணோம் அப்படி என்ன எழுதி கிழிக்கறீங்கன்னு (திட்டினாலும் மரியாத குறையாம பேசறது நம் வீட்டம்மா கிட்ட பிடிச்ச விஷயம்)
போட்டாச்சு போதுமா ? போண் பண்ணக்கூடாது ஒகெவா?
நன்றிங்கண்ணே…………..
எங்கயோ தாக்கறாப்பல இருக்கு. புரியுது…
அண்ணன் சொன்ன தப்பிருக்குமா…………….
பிரமாதம்…அட்டகாசம், ரொம்ப நல்ல எழுதியிருக்keenga!! Sorry, pazhaka doshathuzha sollitan. Appadiye comment panni panni pazhakamayirtha, athaan!! Romba nalla irrunthuthu sharathy (like unni in airtel supersinger)
On a serious note, very practical and hilarious..
நன்றி ப்ரசன்னா…அட அதவிட்டுத் தள்ளுங்க…இந்த பழக்கதோஷ ப்ரச்சனை இருக்கே அது ஜலதோஷத்தோட மோசமானது…..
கொஞ்ச நாளாவே, நம்மளும் ஒரு ஆரம்பிக்கலாமா-ன்னு? ஒரு அரிப்பு (மனசில்தான்)…ஆரம்பிச்சு, நம்மளோட மேதாவித்தனத்த ஊருக்கு சொல்லலாம்னு ஒரு நப்பாசை (அல்லது தப்பாசை!)..
ஆனா, பின்னூட்டம் போட வக்கிறதுல இவ்ளோ இம்சை இருக்குன்னு தெரிஞ்ச பிறகு….உஸ்ஸ்ஸ்.. அப்பா..இப்பவே கண்ணை கட்டுதே…
கொஞ்ச நாளாவே, நம்மளும் blogspot ஒரு ஆரம்பிக்கலாமா-ன்னு? ஒரு அரிப்பு (மனசில்தான்)…ஆரம்பிச்சு, நம்மளோட மேதாவித்தனத்த ஊருக்கு சொல்லலாம்னு ஒரு நப்பாசை (அல்லது தப்பாசை!)..
ஆனா, பின்னூட்டம் போட வக்கிறதுல இவ்ளோ இம்சை இருக்குன்னு தெரிஞ்ச பிறகு….உஸ்ஸ்ஸ்.. அப்பா..இப்பவே கண்ணை கட்டுதே…
யோசிக்காதீங்க அர்ஷத்….உடனே ஆரம்பிச்சுடுங்க….நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ரொம்ப நேரமாக் கத்திக்கிட்டு இருக்கீங்க போல.;-)))))
காக்க வச்சுட்டோமோ…… அடடா…….
இந்தாங்க இன்னிக்கு இம்புட்டுத்தான் இருக்கு.
ரொம்ப நாள் கழிச்சு போட்டிருக்கீங்க….விடுவேனா…? அ…ஆ…..கேட்ச்….
இதுக்கு அப்புறம் நிறைய எழுதியிருக்கேன்….படிச்சு…தக்க சன்மானம் போடுங்க ஜாமி…..ஐயா….
Leave your response!
மணல்கயிறு அப்டேட் வேணுமா?
Recent Posts
Archives
Categories
எனக்கு பிடித்தவை
Tags
கடைசியா வாங்கிய திட்டு
Most Commented
Most Viewed