Articles Archive for February 2009
General, பொது »
அது என்னவோ ரங்கராஜன் என்ற பெயருக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. நான் எங்க பக்கத்து வீட்டு ர.ராஜனை சொல்லவில்லை. நான் குறிப்பிடுவது கவிஞர் வாலியையும் எழுத்தாளர் சுஜாதாவையும். இருவரின் இயற்பெயர் ரங்கராஜன், இருவரின் இயற்நகரம்( பாருங்க சுஜாதாவின் பாதிப்பு) ஸ்ரீரங்கம், நாம் இப்போழுது பேசப்போவது இரண்டாமவரை பற்றி.
படிப்பில் அவர் மின்னணுவியல் பொறியாளர், படைப்பில் (கடவுளின்). அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புதினங்களில்(Science Fiction) அவர் இன்றும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.
தமிழில் பதிவு செய்யலாம் என்று தொடங்கிய பிறகு நிறைய படிக்க வேண்டியாதாயிற்று புத்தகத்திலும் வலையிலும். வலையில் பின்னுவோரின் முக்கால்வாசி எழுத்துக்களில் சுஜாதாவை அவரின் மறைவிற்குப் பிறகும் அவர் உலவிக் கொண்டிருப்பதை என்னால் எழுத்துணர(மீண்டும் சுஜாதா) முடிகிறது.
இன்று தமிழில் ஒரளவுக்கு எழுதுகிறேன் என்றால் அதற்கு இரண்டு பேர் மிக முக்கியமான காரணங்கள் ஆவர்.
என்னுடைய எழுத்துக்களிலேயே …
