ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்
பிரமாண்டமான அரங்கு. அரங்கு முழுதும் சாதனையாளர்களும், வெற்றி பெற்றவர்களும் அமர்ந்திருக்கின்றனர். அழகான வடிவமைப்பு. வைரத்தால் செய்தது போல முகப்பு. அந்த அரங்கம் பார்ப்பதற்கே ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிந்தது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதை பார்க்க வந்தவர்கள் முகத்தில் விருதை நாம் வென்றிருக்கிறோமா என்ற எதிர்பார்ப்பு. கைத்தட்டல்களுடன் பல விருதுகள் கடந்து சென்றன. மகிழ்ச்சி ஆராவாரத்தில் அரங்கமே திளைத்திருந்ததை என் கண்கள் கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தன. ஏன் இந்த திடீர் மாற்றம்? எதற்காக எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இந்த ஆஸ்கர் விருதின் மேல் ஒரு மோகம், எதிர்பார்ப்பு? இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஒரே விடை ரஹ்மான் என்ற அந்த நான்கெழுத்து இசை. ஆங்கிலத்தில் Rahman என்று வருவது ஆஸ்கர் விருதின் சிறப்பம்சம் என்று என் அண்ணன் சத்தியமூர்த்தி நேற்றிரவு கூறினான். இதுவரை வென்றவர்களின் முக்கால்வாசிப் பேர்களின் பெயர்களிலும் ஆரம்பத்திலோ அல்லது கடைசியிலோ “MAN” இருப்பதாக தெரிவித்தான். அவனது பதிப்பிலும் அதை எழுதியிருக்கிறான். ரஹ்மான் வெல்வாரா? இந்தியா சினிமா மற்றும் இசைத்துறையில் வெளிநாட்டவருக்கு நிகர் என்று பல வெற்றிகளின் மூலம் தெரிவித்து விட்டிருந்தாலும், இன்னும் எழுத்தளவிலோ அல்லது விருது வாங்கியோ அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் கோல்டன் க்ளோப் மற்றும் பாஃப்டா அந்த ஆசையை பூர்த்தி செய்தது மன நிறைவை தந்தது.
80வது ஆஸ்கர் வரை நாம் யாருக்கு கிடைக்கிறது என்றே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த 81வது ஆஸ்கரில் சற்று வித்தியாசமாக முதன் முறையாக நமக்கு கிடைக்குமா என்ற ஆசையுடன் பார்த்தோம். இதற்கு முன் ஒரு சில படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும். இன்று ஏதோ ஒரு அதீத நம்பிக்கை. நாம் வெற்றி பெறுவோமென்று. அந்த நம்பிக்கையின் பெயர் ஏ.ஆர்.ரஹ்மான். எனக்கு எந்த வரிசையில் விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை. அதனால், இசைக்கும் பின்னணி இசைக்கும் தரப்பட வேண்டிய விருதுக்காக காத்திருந்தேன்.
ஆபிஸுக்கு நேரமானதால் என் மனைவி குளிக்கச் சொல்லி குரல் கொடுத்தாள். இல்லை போகவிருப்பமில்லை எனக்கு. ரஹ்மானுக்கு கிடைக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு போகிறேன் என்று மறுத்துவிட்டேன்.
அந்த முடிவு எவ்வளவு நல்ல முடிவு என்பதை அடுத்த சில நிமிடங்களில் என்னால் உணரமுடிந்தது. நான் மட்டும் அல்ல என்னை ஆபிஸுக்கு போகச் சொல்லி துரத்திய என் மனைவியும்.
ரஹ்மான் இந்த படத்துக்கு பாடல் மற்றும் பின்னணி இசை அமைக்கும் போது அவரையும் ஸ்ரீதரையும் இன்னும் வெகு சில பேரைத் தவிர யாருக்குமே எந்த படத்திற்கு இசையமைக்கிறோம் என்று தெரியாதாம். அது மட்டுமல்ல ரஹ்மான் அமைத்த இந்த இசை டான்னி பாயலுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற ஒரு சிறு சந்தேகம் ரஹ்மானுக்கே இருந்த்தாகவும் என் நண்பன் ஒருவன் சொல்லிக் கேள்வி. அப்படி ஒரு பயம் இருந்ததாலோ என்னவோ, மிகச் சிறந்த இசையை அவரால் தரமுடிந்தது.
ரஹ்மானின் பயம் ஆஸ்கரில் முடிந்தது.
அந்த நிமிடம், என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அது ஆனந்த கண்ணீர். நிற்கவில்லை. உடம்பினுள் ஏதோ ஒரு வித உணர்ச்சி. என்னவென்று இப்போது சரியாக சொல்லமுடியவில்லை. அப்போது கேட்டிருந்தாலும் என்னால் சொல்லியிருக்க முடியாது. இந்தியன் என்ற பெருமையா? தமிழன் என்ற கர்வமா?
இரண்டு பிரிவுகளில் (சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல்) ரஹ்மானை வெற்றி பெற்றவராக அறிவித்தபோது என்னால் நானாக இருக்க முடியவில்லை. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன். முன்னங்கைய்யால் காற்றில் குத்தினேன். யே! என்று கூச்சலிட்டேன். என் மனைவியை பார்த்து என்னவோ நானே அந்த விருதை வென்றது போல் பெருமிதத்துடன் பார்த்தேன். என் கண்கள்
ஆனந்தக் கண்ணீரில் நனைந்தது. எதிரில் இருக்கும் யாவும் மங்கலாகிப் போனது. இப்போழுதும் கூட அந்த ஆச்சர்யத்தை என்னால் விவரிக்க முடியவில்லை.சொல்ல முடியாத ஒரு உணர்வு. என்னவோ நானே அந்த விருதை என் கையால் வாங்கியது போல இருந்தது எனக்கு.
ஏ.ஆர். ரஹ்மான் – சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசைக்காக விருது பெற்றுக்கொண்டார்.
நன்றி நவிலும் போது மறக்காமல் உடன் பணியாற்றிய அனைவரையும் நினைவு கூர்ந்தும், தன் வெற்றிக்கு மூல காரணம் தன் தாயென்றும் கடைசியில் எல்லாவற்றிர்க்கும் முத்தாய்ப்பாக “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் சொன்னதும் என்று எல்லாமே என்னை புல்லரிக்கச் செய்தது.
என் மொழி, உன் மொழி நம் மொழி, தமிழ். அது இன்று ஆஸ்கர் மேடையை தொட்டுவிட்ட்து அதற்கு காரணம் அந்த உலக மொழி. அது இசை, அதன் மறுபெயர் ரஹ்மான்.
1992ல் ரோஜாவில் தொடங்கி தமிழ் சினிமா சார்ந்த இசையை வடக்கு மட்டுமின்றி இந்தியாவை தாண்டி வெளிநாடிகளுக்கும் எடுத்துச் சென்ற பெருமை ரஹ்மானையே சாரும். ஒருவேளை அன்று மணிரத்னம் வேண்டாம் என்று சொல்லியிருந்தால்? சொல்லியிருந்தால் என்ன, இன்று எப்படியும் ஆஸ்கர் வாங்கியிருப்பார். அவரது திறமை அப்படி.
”ஜெய்ஹோ” பாடி முடித்த மறுவினாடி கேட்ட கைத்தட்டல் சத்தம். அரங்கம் அதிர்ந்தது. இவ்வளவு பெரிய விருது கிடைத்தும் அதை வாங்கும் போதும் கூட ரஹ்மான் முகத்தில் ஒரு பதட்டமோ கர்வமோ காணவில்லை. மிகவும் அடக்கமாக காணப்பட்டார். சந்தோஷம் அவரை ஆட்கொள்ளவில்லை. மாறாக அவர் அதை அமைதியாக அனுபவித்தார். அது அவர் முகத்தில் பிரதிபலித்தது.
ரஹ்மான் வெற்றி பெற்றவராக அறிவித்த போது நில நடுக்கம் வராதது ஆச்சர்யம் தான். ஆமாங்க இந்தியா முழுவதும் மக்கள் கைத்தட்டி இருப்பாங்களே. கொஞ்சம் அதை யூகித்துப் பாருங்கள்.









This is fantastic. I can feel the “unarchi perukkam” from your writing.
It is surely the proudest moment for all of us.
I only feel bad about the jarring note from Kalaignar who has unnecessarily dragged “miniority community” while praising Rahman.
Rahman is not from any caste or religion. He belongs to the universal religion called Love and he belongs to the big community called “music”.
அவரால ஜாதி இல்லாம இருக்க முடியாது சத்தியமூர்த்தி.
நல்ல வேளை அவார்டு கொடுத்தவர் என்ன ஜாதின்னு சொல்லாம விட்டாரே. சந்தோஷப்படுங்க.
ஒரு நாளிதழ்ல இப்படி சொல்லியிருக்காங்க:
ரஹ்மானின் ஃபேவரைட் சிங்கர்ஸ் கமெண்ட்ஸ் (உன்னிமேனன், ஹரிஹரன், ஸ்ரீனிவாஸ் மற்றும் உன்னிக்கிருஷ்ணன்) அப்படிங்கற தலைப்புல இவங்க எல்லாம் பாராட்டினத போட்டிருக்காங்க.
எனக்கு தெரிஞ்சு ரஹ்மானுக்கு எஸ்பிபி, டி எம் எஸ் லாம் கூட ஃபேவரைட் தான்.
அவருக்கு அப்படி ஒண்ணு இருக்கறதா எனக்கு தெரியல, ஹரிஹரன் ஃபேவரைட்டா இருந்தா, உன்னிக்கிருஷ்ணனுக்கு வாய்ப்பே கிடைச்சிருக்காது.
இன்னொருத்தர் சார்பா அவங்க சொல்லாமலேயே சொன்னதா பேசறதும் எழுதறதும் நாளிதழ்களுக்கு வேலையா போச்சு.
விட்டுத் தள்ளுங்க…நாம கொண்டாடுவோம். யார் என்ன சொன்னா என்ன…
உங்கள் பதிவை படிக்கும் போதும் உணர்ச்சியாக தான் இருந்தது.இதில் ஜாதி மதம் தாண்டி இந்தியர் என்ற உணர்வு தான் எல்லோருக்கும் இருந்திருக்கும் .
வருகைக்கு நன்றி மலர்.
நிச்சயமாக நீங்கள் சொல்வதுபோல ஏஆர் ரஹ்மானை நாம் ஒரு முஸ்லிமாகவோ அல்லது இந்துவாகவோ பார்ப்பதில்லை. அவரை ஒரு தலைசிறந்த படைப்பாளியாகவே பார்க்கிறோம்.
கலைக்கு மதம் கிடையாது. அது கலைஞர்க்கு (???????) மட்டுமே உண்டு என்பது உங்களுக்கு தெரியாதா???????????
பதிவும் விவரிப்பும் அட்டகாசம்.. கலக்கிட்டீங்க…
http://udanpirappu.blogspot.com/2009/02/blog-post_23.html
நன்றி வாங்க சார். எங்க ஆளயே காணோமேன்னு பார்த்தேன்.
சார் அப்புறம் உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட வந்தேன். அது வோர்ட்ப்ரெஸ், ஓபன் ஐடி மற்றும் சிலவற்றை தான் அனுமதிக்குது. என்னன்னு பாருங்க தல. மணல்கயிறு தனி டொமைன்ங்கறதுனாலயோ என்னமோ.
வாங்க குரு. வருகைக்கு நன்றி.
சார், இங்க அரசியல பத்தி விவாதம் பண்ணல. நாம ஏஆர் ரஹ்மான் பற்றும் அவரின் இசை மற்றும் ஆஸ்கர் விருதுகள் பத்தி மட்டும் பேசுவோம்.
ஏ .ஆர் . ரஹ்மான் தமிழ் தன் ஆனால் தமிழ் டிவி சநேல்களில் அவர் ஆஸ்கார் எடுத்ததை பெரிய விடயமாக சொல்ல வில்லை. ஹிந்தி நேவ்ஸ் சனெல்கலில் கடந்த ஒரு வரமாக அவர் விருதை வெல்ல பிரார்த்தனைகள் வாழ்த்துகள் என அமர்கள படுத்தின இந்திய தமிழ் ஊடகங்களை விட இலங்கை தமிழ் ஊடகங்கள் இவருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தன, இன்று வரை சன் நெட்வொர்க்கில் மாத்திரம் அவருக்கு வாழ்த்துகளை ஒளிபரப்பு செய்தது. இவ்வளவுக்கும் இவை அவர் பாட்டை போட்டு போட்டு காசு சம்பத்க்கும் ஊடகங்கள்.
விஜய் டிவி மற்ற டிவி களோடு ஒப்பிடும் பொது ஓரளவுக்கு பரவாயில்லை. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நிகழ்ச்சிகள் செய்தது. என்னை பொறுத்த வரை அவரக்கு ஹிந்தி ஊடகங்கள் செய்த பாராட்டு அளவுக்கு தமிழ் ஊடகங்கள் செய்ய வில்லை என்றே சொல்ல தோன்றுகிறது
எனது உணர்வுகளை திருடியதற்காக எனது கண்டனங்களை முன் வைக்கிறேன்
அதை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியதற்காக கணடனங்களை திரும்ப பெற்று கொள்கிறேன்
)
அருமையான பதிவு
//1990ல் ரோஜாவில் //
1992ல் ரோஜா வெளியானது.. நீங்கள் தொடங்கிய ஆண்டை குறிப்பிடுகிறீர்களோ?
வாங்க அண்ணே!!!
உங்கள் எண்ணமும், என் எண்ணமும் ஒன்றாக இருந்தது கண்டு நான் பூரிப்படைகிறேன். இன்று சுஜாதா இருந்திருந்தால் நிச்சயமாக இதற்கு ஒரு அறிவியல் விளக்கம் அளித்திருப்பார்.
1992 ரோஜா எழுத்துப் பிழை. இதோ சரி செய்துவிடுகிறேன். இதுக்காக கோவிச்சுகிட்டு சாப்பிடாம எல்லாம் இருக்கக் கூடாது…
ஆஸ்கார் அவார்டு ……..ஒரு தனி மனிதனுக்கு கிடைத்தவிருது அல்ல தமிழனுக்கு , வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து உயிர்த்த ஒருவனுக்கு , கிடைத்த விருது .
.விழா நீண்ட நேரம் எடுகிறதே என்று நானும் தூங்க சென்று விடேன் . என் மகள் விழித்திருந்து அவரது முறை ,வரும்போது , என்னை அழைத்தாள் உற்சாகத்துடன் நானும் உங்களைபோலவே துள்ளி மகிழ்ந்தேன். . நிச்சயம் அந்த விருது அவ்ருக்கு கிடைக்க வேண்டியதே . “எல்லாப் புகழும் இறைவனுக்கே “. எவ்வளவு தற்பெருமை இல்லாத கடவுள் நம்பிகியுடைய ஒருவரின் கூற்று . நிஜமானது . நானும் மகிழ்கிறேன். உங்கள் மகிழ்வில் . தரமான படைப்பு .
Leave your response!
மணல்கயிறு அப்டேட் வேணுமா?
Recent Posts
Archives
Categories
எனக்கு பிடித்தவை
Tags
கடைசியா வாங்கிய திட்டு
Most Commented
Most Viewed