Home » General, இந்திய சினிமா, தமிழ் சினிமா, நாட்டு நடப்பு, பொது

கலைமாமணி மொக்குமாவு மீனா

28 February 2009 369 views 11 Comments

 

சமீபத்திய மிகப்பெரிய தமாஷ் கலைமாமணி விருதும் அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தான். அரசு சகட்டுமேனிக்கு சும்மா அள்ளி வீரியிருக்கிறது. அவர் இவர் என்றில்லாமல் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கையில் அடித்து நிமித்தியிருக்கிறது அரசு. எதற்காக இந்த விருது என்று யோசிக்கத் தோன்றுகிறது. கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் இது கொடுக்கப்பட்டால் அதற்கு தனியாக ஒரு விருதை பரிந்துரை செய்யலாம். அதற்கு பெயர் கூட யோசித்து வைத்திருக்கிறேன். “என்ன பண்ணாலும்” விருது. பின்ன என்னங்க?

எங்க வீட்டுக்கு பூ கொடுக்கும் பூக்காரம்மா ஜோதி தனக்கு அந்த விருது கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டாள். ஆச்சரியமாக இருந்தாலும் அதிர்ந்து போயிருந்தாலும், கொஞ்சம் தெளிந்து அவளிடம் எதை வைத்து இப்படி பேசுகிறாய் என்று கேட்டதற்கு, அவள் வீட்டருகில் உள்ள தோழி மொக்குமாவு மீனாவுக்கு கடுதாசு வந்திருப்பதாகவும், விருதை அரசு வீட்டிற்கே வந்து கொடுக்கும் என குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினாள்.

அது மட்டுமல்லாமல், ரஜினிகாந்த் வீட்டில் ரொம்ப நாட்களாக வேலை பார்க்கும் முத்துவிற்கும் கடுதாசு வந்திருப்பதாக ஒரு வதந்தி.

சரிதான் இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை போலிருக்கிறது என்று முடிவுசெய்துவிட்டு, நமக்கு எப்படி கிடைக்கும், அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். என் மனைவி இரவுக்குள்ள ஒரு விருதாவது வாங்கிவரலைன்னா சாப்பாடு கிடையாதுன்னுட்டா. இப்ப என்ன செய்ய?

மேலே சொன்னது ஒரு சின்ன கற்பனைதான். இருந்தாலும் இப்ப கலைமாமணி விருது வழங்கறது இந்த லட்சணத்துலதானே இருக்கு. இப்படியே போச்சுன்னா இன்னும் ரெண்டு வருஷத்துல தமிழ் சினிமாவில அந்த விருதை வாங்கதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.

என்னங்க கூத்து இது. இத கேட்க யாருமே கிடையாதா? யாருக்கு விருதுன்னு யாரு முடிவு பண்றது. அந்த கமிட்டிக்கு முதல்ல ஒரு நோட்டீசு விடணும். ரசிகர்கள் வோட்டுக்காகவா இல்ல அந்த கலைஞர்களின் ஜாதி வோட்டுக்காகவா?

அசின் எத்தன வருஷமா தமிழ்ல நடிச்சிட்டு இருக்காங்க? ஐஸ்வர்யா தனுஷுக்கு எதுக்கு விருது? ஞாயப்படுத்த ஆயிரத்தெட்டு காரணம் கொடுக்கலாம். உண்மைன்னு ஒண்ணு இருக்கு இல்ல?

ஒரு பக்கம் நம்மில் ஒரு தமிழன் அமெரிக்கா போய் ஆஸ்கர் வாங்கிட்டு வர்றான். இங்க என்னடான்னா ஒரு வரைமுறையே இல்லாம சும்மா தூக்கிக் கொடுத்துட்டு இருக்கு அரசு. நாகேஷ் உயிரோட இருந்தப்ப அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தணும்னு தோணலை.

கலைமாமணி விருதுக்கு இருந்த மதிப்பு போயாச்சு. இனிமே யாருக்கு கொடுத்தால் என்ன. அடுத்தது ஜோக்கர் துளசிக்கும் கூட கொடுப்பாங்க. மற்ற துறையில சாதிச்சவங்க நிறைய பேரி இருக்காங்க. ஆனா அங்கீகாரம் கிடைக்கிறது சில பேருக்குத்தான். இந்த வருடமும் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு சீரியல நாலு வருஷமா இழு இழுன்னு ரப்பர் மாதிரி ஒருத்தர் இழுத்தடிப்பாராம். அவருக்கு இவங்க விருது கொடுத்து கெளரவபடுத்துவாங்களாம். கலைக்கு எவ்வளவு பெரிய சேவை செஞ்சிருக்கார் திருச்செல்வம். தப்புத் தப்பு கலைமாமணி திருச்செல்வம்.

பாரத் ரத்னா, பத்ம விபூஉஷன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி எதுக்குமே இன்றளவில் ஒரு மரியாதை இருப்பதாக தெரியவில்லை. கொடுக்க வேண்டியவங்களுக்கு கொடுக்கக் காணும். இவங்க இஷ்டத்துக்கு இவங்க விருப்பப்பட்டவங்களுக்கு மட்டும் வாரி வழங்குறாங்க.

இந்த அரசு உடனடியாக இதில் திருத்தம் கொண்டு வரவேண்டும். கலைமாமணி என்றால் அதற்கு ஒரு அளவுகோல் வைத்து முறைபடுத்த வேண்டும். வேளில போனா எல்லாரும் கேட்கறாங்க. பதில் சொல்லி முடியல. அப்படி சரி செய்ய மாட்டோம்னு சொன்னாங்கன்னா குறைந்த பட்சம் அந்த விருத மளிகைக் கடைகள்ள விற்பனைக்கு கொண்டுவந்தாங்கன்னா கூட பரவயில்ல.

கலைமாமணி விருது கிடைக்க சரியான வழி சொல்லி பின்னூட்டம் இடுபவருக்கு அதற்காகவே அவருக்கு அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படுவார். 2010க்கான விருது வேணுமா? அனுப்புங்க ஐடியாவ.

11 Comments »

  • ச்சின்னப் பையன் said:

    /அது மட்டுமல்லாமல், ரஜினிகாந்த் வீட்டில் ரொம்ப நாட்களாக வேலை பார்க்கும் முத்துவிற்கும் கடுதாசு வந்திருப்பதாக ஒரு வதந்தி.

    //

    முத்துக்கு இவ்ளோ வருஷமா கொடுக்கவேயில்லையா??? என்ன கொடுமை இது சரவணன்????

    //குறைந்த பட்சம் அந்த விருத மளிகைக் கடைகள்ள விற்பனைக்கு கொண்டுவந்தாங்கன்னா கூட பரவயில்ல//

    ஹிஹி. அதன் கண்மணிகள் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் கடத்தி, அந்த மாநிலங்களிலேயும் நிறைய கலைமாமணிகள் உருவாயிடுவாங்க… பரவாயில்லையா????

  • aravindhan said:

    hello..

    naan indha padhivukku reply panni irukkeney enakkum viruthu koduppangalo…

  • chinnappaiyan said:

    ????

    I posted 2 comments yesterday night…

    they are gone??????

  • karthigaipandian said:

    நல்ல பதிவு தோழா.. நாம நினச்சத சொல்லி இருக்கீங்க.. ஒருவேளை கலைஞரை புகழ்ந்து பத்து போஸ்டர் ஒட்டுனா அதுக்கும் கொடுப்பாங்களோ.. என்ன கொடும நண்பா இது..

  • vijayasarathyr (author) said:

    இல்ல ச்ச்சின்னப்பையன்…..கேரளாவுக்கு போன அது கெலைமாமணி…அதுவே ஆந்திரா போன கலைமாமணிலு அல்லது கலைமாமணிடூ ஆயிடும். இருந்தாலும் மக்கள் …நல்ல கவனிங்க…மக்கள் அந்த விருத இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது…அதனால நாங்களே….அதாங்க…அட இதயெல்லாம் முழுசா சொல்ல வெளிப்படையா…போங்க நீங்க…எங்களுக்கு வெக்கம் வெக்கமா வருது…

    இந்த பதிவுக்கு பின்னூட்டம் மட்டும் போதாது அரவிந்தன்….தல டிஸ்சார்ஜ் ஆன போது வழியல நின்னு கொடியசச்சு கை காட்டினீங்களா….

    க.பா….மேலே சொன்னதுதான் உங்களுக்கும்…அதென்ன கலைமாமாணி விருது அவ்ளோ சீப்பா (அட தல சீவறது இல்லீங்க…அட அந்த தல இல்லீங்க)..இப்படி எத பேசினாலும் அதுல நக்கல் பண்ணா…நான் என்ன பண்றது…அப்புறம் வாழ்க்கை வெறுத்துப் போய் கலைமாமணி அவார்டு வாங்கிட்டு வந்துருவேன்…சொல்லிப்புட்டேன்.

  • R Sathyamurthy said:

    கலைஞர் வாழ்க! புரட்சித்தலைவி வாழ்க!! புரட்சிக் கலைஞர் வாழ்க!!! இன்னும் யார் முதல்வர் பதவிக்கு கனவு காண்கிறார்களோ, அவுக எல்லாம் வாழ்க!!!

    ஹி ஹி ஹி; சும்மா, ச்ச்ச்ச்சும்மா!!!! எனக்கும் கலைமாமணி கிடைக்க ஒரு சான்ஸ்.

    ஆமாம், ஷ்ரேயா பாத்ரூம் ட்ரஸ்ல கலைஞர் முன்னால வாக் போனாங்களே, அவுங்களுக்கு ஏன் கலைமாமணி குடுக்கல?; அப்புறம் ம்ம்ம்ம்மல்லிக்கா ஷெராவத் ஜட்டி பனியனோட தசாவதாரம் விழாவுல கலந்துக்கிட்டாங்களே அவுங்களுக்கு ஏன் குடுக்கல? ஒருவேள் அவுங்களுக்கு கலைமாதுணி குடுப்பாங்களோ?

  • R.Sridhar said:

    எனக்கும் ஒன்னு கிடைக்குமா? தல விஜயசாரதி வால்க வால்க சிபாரிசு செய் தல

  • vijayasarathyr (author) said:

    அண்ணன் விஜ்யகாந்த விட்டுபுட்டீக, சரத்குமார விட்டுபுட்டீக…

    சரி சரி கலைஞர் வாழ்கன்னு சொன்னதுக்கெல்லாம் விருது கொடுக்கமுடியாது. வேணும்னா கலைஞர் உங்களுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கலாம். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவு ஆகும். பரவாயில்லையா? வேறே ஒண்ணும் இல்ல, உங்களுக்கு பட்டம் கொடுத்தா அந்த பட்டமளிப்பு விழா செல்வு உங்களுடையது. சரியா? வைரமுத்து கண்டிப்பா வரணும்.

  • vijayasarathyr (author) said:

    அதெல்லாம் முடியாது. எங்க ஆட்சிய நீங்க தப்பா நினைச்சிட்டீங்க…நாங்க சிபாரிசுக்கெல்லாம் இடம் அளிக்க மாட்டோம். அதனால தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு கூட மத்தென (ஸாரி) மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி சிபாரிசு செய்யறதில்லை.

    இருந்தாலும் விஜயசாரதி வால்கன்னு அழகான சங்கத்தமிழ்ல சொன்னதுனால வேணும்னா கலைஞர் உங்களுக்கு விருது கொடுக்கலாம். அது உங்க திறமைக்கு கிடைத்த விருதா நாங்க சொல்லிக்குவோம்.

  • Ullasam said:

    Palarin Mana kumuralgalai ungal varigalil padikka mudindhadhu…
    Nanri…..

    by the by can you please give the list of kalaimamani recipient this year?

    Edhaiyum oru award a nu nammallai madiri podhu makkal kari thuppuradhai yaaravadhu arasaangathidam kondhu ponaal parava illai…..

    Illaiyeal Ungal sevai thodarum

  • கிருத்திகன் said:

    யோவ் சும்மா இரய்யா
    புரட்சித்தலைவி காலத்தில சிம்பு, திரிஷா, ஜீவான்னு ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கூட்டத்துக்கே கலைமாமணி கொடுத்தாங்கப்பு….அதே மேடையில் கவுண்டமணி செந்தில் கூட வெக்கமில்லாம வாங்கிட்டுப் போனாங்க…. விவேக்குக்கு பதமஸ்ரீ கொடுத்த அடுத்த கணமே ரஹ்மான் போன்றவர்கள் தங்கள் பத்மஸ்ரீயை தூக்கி எறிஞ்சிருக்கணும்

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.