Articles Archive for February 2009
General, இந்திய சினிமா, தமிழ் சினிமா, நாட்டு நடப்பு, பொது »
சமீபத்திய மிகப்பெரிய தமாஷ் கலைமாமணி விருதும் அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தான். அரசு சகட்டுமேனிக்கு சும்மா அள்ளி வீரியிருக்கிறது. அவர் இவர் என்றில்லாமல் எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கையில் அடித்து நிமித்தியிருக்கிறது அரசு. எதற்காக இந்த விருது என்று யோசிக்கத் தோன்றுகிறது. கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எண்ணத்தில் இது கொடுக்கப்பட்டால் அதற்கு தனியாக ஒரு விருதை பரிந்துரை செய்யலாம். அதற்கு பெயர் கூட யோசித்து வைத்திருக்கிறேன். “என்ன பண்ணாலும்” விருது. பின்ன என்னங்க?
எங்க வீட்டுக்கு பூ கொடுக்கும் பூக்காரம்மா ஜோதி தனக்கு அந்த விருது கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்டாள். ஆச்சரியமாக இருந்தாலும் அதிர்ந்து போயிருந்தாலும், கொஞ்சம் தெளிந்து அவளிடம் எதை வைத்து இப்படி பேசுகிறாய் என்று கேட்டதற்கு, அவள் வீட்டருகில் உள்ள தோழி மொக்குமாவு மீனாவுக்கு கடுதாசு வந்திருப்பதாகவும், விருதை அரசு …
