பிக் பஜார்; படா பேஜாரு…
நேற்று பிக் பஜார் சென்று வந்தேன். அங்கு போன பிறகுதான் தெரியும் அது பிக் பேஜார் என்று. தி நகர் ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்த ஒரு உணர்வு. என்ன ஒரு சின்ன வித்தியாசம் என்றால், வெய்யிலில் அலைய மாட்டோம், கூவி அழைத்து விற்பனை செய்வதிலிருந்து எல்லா விலைகளிலும் பொருட்கள் கிடைக்கும் என்பதுவரை, இது ஒரு ரங்கநாதன் தெருவே.
கூட்டம் அலைமோதுகிறது. வாங்குபவர்கள், நோட்டம் பார்க்க வந்தவர்கள் என ஒரு மினி சென்னையே உள்ளுக்குள் உலவுகிறது. “இந்த மாதம் உங்கள் சேமிப்பு என்ன?” என்பது போன்ற விளம்பரங்களின் விளைவே இந்த கூட்டம் என கருதுகிறேன்.
என்னுடைய நேற்றய அனுபவம் இங்கே:-
1. அநேகமான பொருள்களின் விலைக்குறைப்பு என்பது முக்கால்வாசி உங்கள் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையிலேயே கிடைக்கிறது.
2. நாம் நினைப்பது போல அப்படியொன்றும் பெரிதாக சேமிப்பதாக எனக்கு தெரியவில்லை. ரூ.3000க்கு சாமான் வாங்கினால், ரூ.300 சேமிப்போம். இதில் ஆட்டோவுக்கான ரூ.100 போய்விடும். அலைஞ்சு திரிஞ்சு நாம் தேடி எடுத்ததற்கான சன்மானமே அந்த ரூ.200 என்று கருதுகிறேன். நான் வழக்கமாக வாங்கும் மளிகைக் கடையில் தொலைப்பேசியில் சொன்னால் வீட்டிற்கே சாமான் வந்துவிடும்.
3. சேமிக்கிறோம் என்றெண்ணி இரண்டு மாதத்திற்கான சாமான் வாங்கிவிடுவோம். நம் மளிகைக் கடையில் ஒரு மாத கணக்கே வரும். க்ரெடிட் கார்டில் வாங்குபவர்கள் தேவையில்லாமல் 2 மாதத்திற்கு வாங்குவதினால், வட்டி கட்ட வேண்டி வரும். இவர்களுக்கு அந்த ரூ.200 சேமிப்பும் கிடையாது.
4. நமக்கு தேவையான அன்றாட பொருட்களின் மேல் தள்ளுபடி கிடைப்பது அரிது.
5. இடப் பற்றாக்குறையை தீர்க்க உடனடியாக ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும்,
6. பார்க்கிங் மற்றொரு தொல்லை. இது பிக் பஜாரின் குறையல்ல. ஆனாலும் கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது.
7. நமக்கு தேவையான பொருள்கள் பல கம்பெனிகளின் தயாரிப்புகளில் கிடைப்பது மிக நல்ல விஷயமாகப்படுகிறது. எந்தத் தயாரிப்புகளை வாங்கலாம் என்ற முடிவெடுக்க நல்லதொரு வாய்ப்பினை அளிக்கிறது. அதுவே நம் உள்ளூர் கடைகளில் வாங்கினால் கிடைப்பது கடைக்காரன் கொடுப்பதுதான்.
8. ஒரே இடத்தில் எல்லா பொருட்களும் கிடைப்பது நம் அலைச்சலை தவிர்க்கிறது அத்தோடே நம் நேரத்தையும் சேமிக்கிறது.
9. தள்ளுபடி இருந்தால் மட்டுமே முக்கால்வாசி மக்கள் பொருட்களை பார்க்கிறார்கள். மற்றவைகளை (நல்ல பொருளாய் இருந்தாலும்) சீண்டிப்பார்த்து சிரமம் எடுத்துக் கொள்வதில்லை.
10. என்னதான் வீட்டிலிருந்து கிளம்பும் முன் வாங்கவேண்டிய சாமான்களின் லிஸ்ட் எடுத்துக் கொண்டு போனாலும், அங்கு தேவையற்ற பல சாமான்களை வாங்கிவிடுவோம். உபரியாக வாங்க வேண்டியதை முக்கியமாக வாங்கி, முக்கியமானதை விட்டுவிட்டு வருவோம். இதனால் அதிகமான செலவு மற்றும் முக்கியத் தேவைகளை வாங்காதது போன்ற மைனஸ் பாயிண்டுகள் உண்டு.
இதே சுப்பர் மார்க்கெட் வெளிநாடுகளில் எப்படி என்பதை இந்தப் பதிவின் தொடர்ச்சியாக அடுத்த பதிவில் பதிக்கிறேன் (பெரிய சிற்பி..பதிச்சிட்டாலும் அப்படின்னு நீங்க சொல்றது என் காதுல விழவே இல்லைங்க).









சரிதான். அப்போ சுத்தி (அடிக்கிற சுத்தி இல்லே!!!) பாக்க மட்டும் போனா போதும்னு சொல்லுங்க….
ஆமாம் சத்யா. வடிவேலு ஸ்டைல்ல சொன்னா நமக்கு ஆணி புடுங்க நேரம் இருந்து ஆணி எதுவும் கிடைக்கலைன்னா…பிக் பஜார் போயிட்டு வரலாம்.
அப்படியே சுத்தியும் பார்க்கலாம் சுத்தியையும் பார்க்கலாம்.
neengal chennai big bazaar-l irunth neram naan bangalor big bazaar-l irunthen……
ithe nilamaithaan…..security kedupidikal veru….
moochu vida idamilla idathil kaikuzanthiyudan varum pengal veru…..
sivaji pada opening show kanaka kalla kattum idathil perya queue.
hmmmmm……..IT market/porulaathaaram unmayila sarinchuthaan iruka-:)
வாங்க பாஷா. வணக்கம்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நானும் கூட ஒரு தம்பதியினர் தன் கைக்குழந்தையை அம்மாவிடம்(மாமியாராகத்தான் இருக்கும்) கொடுத்து வைத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். அவர் நிம்மதியாக மடியில் போட்டுக் கொண்டு மாடிப்படியருகே அமர்ந்திருந்தார்.
பொருளாதாரம் சரிந்ததையே ஒரு காரணமாக வைத்து (நினைப்புதான் பிழைப்பை கெடுக்கிறது என்பதை அறியாமல்) மக்கள் அங்கு வருகின்றனர் என்று நினைக்கிறேன்.
சர்க்கரை வியாதி இருப்பவர்கள் போனால், இது ஒரு நல்ல உடல்பயிற்சி. ஆனால், அதுக்கு எதுக்கு ஆட்டோ செலவு செய்யணும். “மெரினா பீச்”
போனா போச்சு. இப்பல்லாம், அங்க பென்ச் ப்ரெஸ் எல்லாம் முடிஞ்சு வேர்ட்ப்ரெஸ் செய்றாங்கன்னு கேள்வி.
ஆமாம் சத்தியா! ரத்த அழுத்தம் இருந்தாலும் கூட வார்த்தைஅழுத்தத்துல அழுத்தம் போயி பல அர்த்தம் கிடைக்குதாம்.
(ஏதோ சிலேடையா பேசறதா நினைச்சு..உளரிட்டேனோ)
வீடு பிக் பஜார் அருகில் இருந்தால் கண்டிப்பாக கொஞ்சம் சேமிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாயிடும் போலிருக்கு.
One more issue with Big Bejaar …. that they cheat with their offers, 1st week of jan they had and offer and gave a coupon which (according to reconfirmation) could be redeemed at the next shopping. But same was denied when visited last week, saying that was pongal offer and should’ve been redeemed. Ok i agree there could be a communication gap, but they have one lady for Customer (cushtomer) care :p … who just makes you decide that you’ll never walk into any of their store again. Period.
இந்த கூப்பன் கூத்து பெரும் கூத்துங்கண்ணா…..
ஒருவேளை பல கஸ்டமர்கள் வருவதால் கஷ்டத்தையே க(ஸ்)ஷ்டமாக ஆக்கிவிட்டார்களோ.
வாடிக்கையாளர்கள் கதை வேடிக்கையாகி போச்சு போங்க.
Leave your response!
மணல்கயிறு அப்டேட் வேணுமா?
Recent Posts
Archives
Categories
எனக்கு பிடித்தவை
Tags
கடைசியா வாங்கிய திட்டு
Most Commented
Most Viewed